Tuesday, January 10, 2012

அந்த நாள்



சூல் கொண்ட மேகங்களால்

தொலைந்து போன வானம்
மெல்ல விசும்புகிறது
வீசும் காற்றில்
தூரத்து மரங்கள்
கூச்சம் கொள்வதைக்
கண்ணாடிச் சுவர்கள்
விவரிக்கையிலேயே
வியர்க்கத் துவங்குகின்றன
நீண்ட வாலுடன்
வீங்கிய தலையுடன்
நீந்தியோடும் ஆயிரம் திவலைகளுக்கு
நான் நானாகும் முன்னே
ஓடிய ஓட்டத்தைச் சொல்கிறேன்
தோற்கும் திவலைகள் போலவே
அன்று வெல்லாதவைகள்
முதுகில் சுமந்தது
பெருக்கல் குறியா
அல்லது என்னைப்போல
பிரியும் சாலையா

[யாருமே பிரசுரம் செய்ய இயலாத கவிதை. இதுக்குத்தான் வலைப்பூ இருக்கணும்கறது]



3 எண்ணங்கள்:

sasikala said...

நான் நானாகும் முன்னே
ஓடிய ஓட்டத்தைச் சொல்கிறேன்
நன்றாகவே சொல்லி இருக்கீங்க அருமை

D.R.Ashok said...

வட இந்தியால குளிர்தாங்கமா.. பரலோகம் போய்கிட்டுயிருக்காங்க... இன்னைக்கி 100.. :(

//நீண்ட வாலுடன்
வீங்கிய தலையுடன்//
புச்சாதான் கீது... அல்லிய மலர காத்து அசைக்குது.. அசையும் வழியில் குளமும் கூசுது (திவலையில்)...

கவிதை புரிஞ்சிடுச்சு :)

Rathnavel said...

வாழ்த்துகள்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment