பத்திரிகை ஆசிரியர்கள் என்பவர்கள் சமூகத்தின் மிக உயர்ந்த இடம் பெற்றிருந்த நிலை மாறிவிட்டதைப் பற்றி குஷ்வந்த் சிங்க் எழுதிய கட்டுரையின் எனது தமிழாக்கம். அம்ருதா இதழில் வந்தது.
இந்தியப் பத்திரிகைத் துறையின் அறையும் உண்மை: "முதலாளிகள் மட்டுமே பொருட்டானவர்கள்; ஆசிரியர்கள் இல்லை"
ஒரு காலத்தில் - வெகு நாட்களுக்கு முன்பல்ல - பத்திரிகை ஆசிரியரின் சமூக நிலை, பெயர் இவையெல்லாம் அந்தப் பத்திரிகைகளுக்குப் பெருமை சேர்த்திருந்த நிலைமை இருந்தது.
பிரிட்டானிய ராஜ்ஜியத்தில், பிரிட்டானிய முதலாளிகளைக் கொண்ட 'டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஸ்டேட்ஸ்மேன்' போன்ற தேசிய நாளேடுகளின் ஆசிரியர்களுக்கு அரசின் விருதுகள் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, இந்தியர்கள் பத்திரிகை ஆசிரியர் பொறுப்பேற்றபோது, அவர்களுக்கு சமுதாயத்தின் ஆகச் சிறந்த கெளரவம் கிடைத்திருந்தது. பிரான்க் மொரேஸ், சலபதி ராவ், கஸ்துரி ரங்க ஐயங்கார், போதென் ஜோசப் மற்றும் பிரேம் பாட்டியா போன்ற பெயர்கள் எல்லா வாசகர்களுக்கும் தெரிந்திருந்தது. எண்பதுகளில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆசிரியரான திலிப் பட்கோங்கர், பிரதம மந்திரிக்கு அடுத்ததாக நாட்டின் முக்கிய பதவி தன்னுடையது தான் என்று அறுதியிட்டத்தில் பிழை ஒன்றும் இல்லை. ஆளும் கட்சியின் மீதான நேர்மறையான விமர்சனங்கள், எதிர்க்கட்சிகளிடமிருந்து இல்லாமல், முழு பத்திரிகை சுதந்திரத்துடன் இருந்த சிறந்த, பொறுப்புள்ள ஆசிரியர்களிடமிருந்து வந்தன.
இந்த நிலை தொலைக்காட்சியின் வளர்ச்சியில் மாற்றமடைந்தது. தங்கள் கண் முன்னால் நிகழும் நிகழ்வுகளை பார்த்த மக்கள் மறுநாள் காலையில் அவைகளைப் பற்றி படித்திட தினசரியைப் பார்க்க எத்தனிக்க மாட்டார்கள். ஆகக் குறைவான சிலரே தலையங்கங்களைப் படிக்கிறார்கள். மின்னணு ஊடகங்களின் சவால்களைச் சமாளிப்பதில் முனைப்பு காட்டும் தினசரிகளின் முதலாளிகளும் அவர்தம் வணிக மேலாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களைத் தூக்கி எறியலாமென்பதைப் புரிந்து கொண்டனர். தேவையாயிருந்தது எல்லாம் குறைவான உடையணிந்த நட்சத்திரங்கள் அல்லது விளம்பர அழகிகளின் படங்கள், புதிது புதிதான உணவுகளின் செய்முறைகள், புராதன மதுவகைகள் மற்றும் கிசு கிசுக்கள் போன்றவற்றை வைத்து தங்கள் பக்கங்களை நிரப்புதல். இந்தச் சூத்திரத்தை நான்கு வார்த்தைகளில் அடக்கி விடலாம்: திரைப்படங்கள், சமகால நாகரீகம், உணவு மற்றும் ஆசிரியர்களை வன்புணர்தல். இந்த வன்புணர்ச்சிக்கு இரையான பெருமை வாய்ந்த எழுத்தாளர்கள் பலர் : பிரான்க் மொரேஸ், கிரிலால் ஜெயின், B.G.வெர்கீஸ் (மாக்செசே பரிசு வென்றவர்), அருண் ஷோரி (மற்றொரு மாக்செசே வென்றவர்), வினோத் மேத்தா, இந்தர் மல்ஹோத்ரா, பிரேம் ஷங்கர் ஜா. இன்று டைம்ஸ் ஆப இண்டியா, தி டெலிகிராப், தி ஸ்டேட்ஸ்மேன் இவற்றின் ஆசிரியர் யார் என்று கேட்டால் பத்தில் ஒன்பது பேருக்குத் தெரிந்திருக்காது. திலிப் பட்கோங்கரைப் பற்றிக் கேட்டால் 'திலிப் ....யாரது?' என்ற பதில் வரும்.
இந்தியப் பத்திரிகைத் துறையின் கடினமான உண்மை என்னவென்றால் - முதலாளிகள் முக்கியம்; ஆசிரியர்கள் அல்லர். பணம் முக்கியம்; திறமை அல்ல; ஏசியன் ஏஜ் பத்திரிகையின் நிறுவன-ஆசிரியரான M.J.அக்பர் முகாந்திரங்களின்றி தூக்கி எறியப்பட்டது, பணபலம் ஆளுமையும், அனுபவத்தையும் குப்பைக்கூளத்தில் போட்டதற்குச் சமீபத்திய சான்று. அவர், நிலவும் இன்றைய ஆளுமைகளில் ஆகச் சிறந்தவர். அவர் தான் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆனந்த பஜார் குழுமத்தின் சார்பில் சண்டே வாராந்தரி மற்றும் தி டெலிகிராப் தினசரி ஆகியவற்றைத் துவக்கி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். பல பதிப்புகள் கண்ட ஐந்தாறு புத்தகங்கள் எழுதியவர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் சில நண்பர்களுடன் ஏசியன் ஏஜ் பத்திரிகையைத் துவக்கினார். நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் லண்டன் மாநகரிலிருந்து வெளியான ஏசியன் ஏஜ் ஒரு துணிச்சலான முயற்சியாகும். மிகக் குறைவான விளம்பரங்களே இருந்ததெனினும், வேறெந்த இந்தியப் பத்திரிகையைக் காட்டிலும் படிக்க சுவாரஸ்யமான பல விடயங்களை ஆங்கில மற்றும் அமெரிக்க பத்திரிகைகளிலிருந்து உள்ளடிக்கியிருந்தது. ஒரு முழுமையான தினசரிக்கான அடையாளங்கள் அனைத்தும் அதனிடம் இருந்தன. இத்தகைய பிரத்யேக குணாதிசியங்களுடன், அது அரசையும், ஆளும் கட்சியையும் விமர்சிப்பவர்களின் கட்டுரைகளையும் பிரசுரித்தது. பத்திரிகையின் இந்த ஒரு அம்சம் ஒரு வேளை அக்பருடைய புதிய பங்கீட்டாளரை எரிச்சல் அடையச் செய்திருக்க வேண்டும். அவர் தனக்கான அரசியல் அபிலாக்ஷைகளுடனும், அரசின் சாதகமான பக்கத்தில் நிற்கும் விருப்பத்துடனும் இருந்தார். இதன் விளைவாக, ஒரு வித முன்னெச்சரிக்கையுமின்றி, மார்ச் 1 அன்று காலை அலுவலகத்துக்குச் செல்லுகையில் ஏசியன் ஏஜ் பத்திரிகையின் பெயர்ப் பலகைகளில் தலைமைப் பத்திரிகையாசிரியர் பொறுப்பில் தனது பெயர் இனி இல்லை என்று அக்பர் அறிய வந்தார். அது நல்ல வளர்ப்பு முறையில்லாத, பணம் படைத்த ஒருவரால் இழைக்கப்பட்ட ஒரு மன்னிக்க முடியாத அவமரியாதையாகத் திகழ்ந்தது.
தனக்கும் பத்திரிகைத் துறைக்கும் தவறிழைத்தவர்களை அக்பர் என்ன செய்யப் போகிறார் அல்லது என்ன செய்யக் கூடும் என்பதைக் கணிப்பது கடினம். இந்நிகழ்ச்சி அவரை உறுத்திக்கொண்டிருக்கும். அவருக்கு 57 வயதுதான் ஆகிறது. மேலும் அவர் மறப்பவரோ, மன்னிப்பவரோ அல்லர்.
இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இண்டியா பத்திரிகையின் பிரதிகள் துர்லபமான 60,000 எண்ணிக்கையிலிருந்து 4,00,000 இலக்கை அடைய எனக்கு உதவிய சிறிய ஆசிரியக் குழுமத்துள் அக்பரும் ஒருவர். அக்பர் இந்த வருடம் தூக்கி எறியப்பட்டது போலவே நானும் 1978 இல் கழற்றி விடப்பட்டது ஒரு முரண்நகை. இந்தப் பத்திரிகையும், பென்னெட் கோல்மன் பதிப்பித்த எல்லா வெளியீடுகளைப் போல (டைம்ஸ் ஆப் இந்தியாவையும் சேர்த்து), அரசு, ஜெயின் குடும்பத்திற்கு மீட்டுக் கொடுத்தது. அவர்கள் பொறுப்பேற்ற உடனேயே என்னுடைய விடயத்தில் தலையிடத் துவங்கிவிட்டனர். என்னுடைய வேலை ஒப்பந்தம் முறிக்கப்பட்டு, எனக்குப் பின் பொறுப்பு ஏற்பவர் அமர்த்தப்பட்டார். எனக்கு ஒரு வாரம் இருந்தது. இல்லஸ்ட்ரேடட் வீக்லிக்கு ஒரு செழுமையான வருங்காலம் வரவேண்டுமென்று ஒரு கண்ணீர் மல்கிய பிரிவுரை எழுதினேன். அது பிரசுரிக்கப்படாமலே போனது. என்னுடைய மேசையை சரி செய்ய காலை அலுவலகத்திற்கு வந்த போது, உடனே விலகுமாறு கோரிய கடிதம் என்னிடம் கொடுக்கப்பட்டது. என்னுடைய குடையை எடுத்துக் கொண்டு, நடந்து வீடு திரும்பினேன்.
அது தகாத (உரித்தானதல்லாத), வேண்டுமென்றே இழைத்த ஒரு இழிவு. இன்னமும்கூட அது என்னை வருத்துகிறது. ஜெயின் பழிவாங்கல் இன்று வரை தொடர்கிறது. என்னை கவுரவிக்கும் - அமிதாப் பச்சன், மகாராணி காயத்ரி தேவி, பிரதம மந்திரி மன்மோகன் சிங் போன்றோர் தலைமையில் நடக்கும் - விழாக்களைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதுகையிலும் கூட எனது புகைப்படங்கள் வருவதே இல்லை. பானை நிறைய பணமும் ஏராளமான அதிகாரமும் அடையப் பெற்றவர்கள் இப்படித்தான் சிறு-புத்தியுடன் இருக்கிறார்கள்.
Showing posts with label மொழியாக்கம். Show all posts
Showing posts with label மொழியாக்கம். Show all posts
Tuesday, December 29, 2009
Wednesday, October 28, 2009
யானை, புலி மற்றும் அலைபேசி
சஷி தரூர் - தற்போதைய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர். முன்னாள் வெளியுறவுத்துறை உயர் அதிகாரி - ஐக்கிய நாடுகள் சபையில் முக்கிய வேலை பார்த்து, UN-Secretary General பதவிக்கு ஆசைப்பட்டு, நிறைவேறாமல் போனதைக் கடந்து வந்தவர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் –
the Elephant, the Tiger & the Cellphone என்ற தலைப்பில்
சென்ற வாரம் பரோடாவிலிருந்து வேலை மாறி சென்னை சென்ற என் nephew (மருமகன் என்றால் என்னோட யூத் இமேஜ் என்னாவது?) விமானத்தில் எடை அதிகமாவதைப் பற்றி கவலைப்பட்ட போது, என்னாலான சிறிய உதவி என்று இந்தப் புத்தகத்தை அவனிடமிருந்து ...அதென்ன...லபக்கிவிட்டேன். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்தியா பற்றிய சிந்தனை என்று பொத்தாம் பொதுவாக இந்தப் புத்தகத்தைப் பற்றி (படிக்காமலேயே) சொல்லலாம் என்று நினைக்கிறேன். சஷி தரூரின் பல காலக் கட்டுரைகளால் நிரம்பிய இந்தப் புத்தகத்திலிருந்து அவ்வப்போது சிலவற்றை எழுதலாம் என்று நினைக்கிறேன்.
இதில் நிறைய அனுகூலங்கள்: பதிவெழுத மேட்டர் கிடைக்கிறது; கற்பனை வறட்சி பற்றி கவலைப்பட வேண்டாம்; எதிர் வினைகள் வந்தால், 'அதானே, இது என் கருத்து இல்லை சார்/மேடம்' என்று சொல்லி நழுவலாம்; 'மொழியாக்கம்' ஸ்பெஷலிஸ்ட் என்று போர்டு போட்டுக்கொள்ளலாம்.
இனி Over to Mr.Sashi.
முன்னுரை: ஏன் இந்தியா முக்கியமாகிறது?
2007 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர இந்தியாவுக்கு அறுபது வயதானது. இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்தியாவுக்கு என்ன வாய்ப்புகள் தரவிருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில் ஏன் அவசியமாகிறது?
பிரித்தானிய வரலாற்றாளர் E.P.தாம்சன் அவர்களின் கூற்றுப்படி "இந்தியா, எதிர்கால உலகின் மிக முக்கியமான நாடாகும்". நான் இத்தகைய தீர்ப்பைச் சொல்ல முடியாவிடினும் பத்து வருடங்கள் முன்னர் எனது 'இந்தியா - நள்ளிரவிலிருந்து நூற்றாண்டு வரை' என்ற புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டில் இவ்வுலகம் எதிர்நோக்கும் மிக முக்கியமான விவாதங்களின் நாற்சந்திகளில் இந்தியர்கள் நிற்பதைக் கண்டேன்.
உணவா - விடுதலையா என்ற விவாதம்: ஜனநாயகம் ஏழ்மையைப் போக்கும் சாதனங்களைத் தர வல்லதா அல்லது அதன் கட்டுவிக்கப்பட்ட திறமையின்மைகள் வேகமான வளர்ச்சியைத் தடை செய்கிறதா? ஒரு வளரும் நாட்டுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத, தற்காலிக கூட்டணியாட்சி முறை ஒத்து வருமா? இன்றைய தலைமுறை பொருளீட்டுவதில் மட்டும் நாட்டம் கொள்ளும் சூழலில், அரசியல் சுதந்திரம் ஒரு தேவையற்ற கவனச் சிதறல் எனலாமா?
மையக்கட்டுப்பாடா மாநில சுயாட்சியா விவாதம்: நாளைய இந்தியா ஒரு வலுவான மைய அரசால் - மொழி, சாதி, பிராந்திய விடயங்களால் துண்டாகும் போக்கினைக் கட்டுப்படுத்தும் ஆளுமையுடைய அரசால் - ஆளப்பட வேண்டுமா அல்லது மையக்கட்டுப்பாடு இல்லாத அரசே சிறந்ததா? ஆண்டிப்பட்டியையும், அருணாச்சலப் பிரதேசத்தையும் பாதிக்கும் ஒவ்வொரு முடிவும் டில்லியில் தான் எடுக்கப்பட வேண்டுமா?
பன்முகமா, அடிப்படைவாதமா என்னும் விவாதம்: பல இனக்குடிகள் இருக்கும் நாட்டில் அரசியல் சாசனத்தில் உருவாக்கப்பட்ட (மேற்கத்திய நாடுகளின் கவர்ச்சியில் ஏற்பட்டது என்று தாக்கப்படும்) மதற்சார்பின்மை இன்றியமையாததா அல்லது இந்தியா, மற்ற பல மூன்றாம் உலக நாடுகள் போல, ஏறக்குறைய நம் எல்லா அண்டைநாடுகள் போல, நம்முடைய பிரத்யேக மத அடையாளத்துடன் திகழ்வதில் நாட்டம் செலுத்த வேண்டுமா?
கோகோ-கோலாநைசெஷன் விவாதம் அல்லது உலகமயமாக்கலா சுயச்சார்மையா விவாதம்: நாற்பது ஆண்டுகளாக தன்-நிறைவு என்னும் தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்த இந்தியா உலகப் பொருளாதாரத்திற்கு தன் கதவுகளை இன்னும் திறக்க வேண்டுமா அல்லது மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் அதன் ஊடே, அனுமதிக்கவே தகாத சீரழிவுகளை இந்திய சமுதாயத்தில் கொணருமா?
MTV யின் கேடுவிளைவிக்கும் மோகவலையில் இருந்து நம் இளைஞர்களைப் பாதுகாக்க, வேலிகளை உயர்த்த வேண்டுமா?
நான் என்னுடைய புத்தகத்தில் சொல்லாத ஐந்தாம் விவாதமும் இருக்கிறது. என்னுடைய அப்போதைய எஜமானர்களான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டுக்கு மதிப்பளித்து அதை எழுதவில்லை. துப்பாக்கியா-நெய்யா (Guns vs Butter) என்னும் விவாதம்: தேசப்பாதுகாப்பு செலவா அல்லது வளர்ச்சிக்கான நிதியா என்னும் விவாதம். பயங்கரவாதத்தின் புது அச்சுறுத்தல்களுடனும் புதுப்பிக்கப்படும் அணு ஆயுதப் போரின் சாத்தியங்களிலும் தொடங்கிய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தற்போது இராணுவப் பாதுகாப்பு (அயல் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவது)அவசியம் என்பவர்களுக்கும் மனிதப் பாதுகாப்பே (பசிப்பிணியிலிருந்தும், வாழ்வில் நம்பிக்கை இழந்த நிலையிலிருந்தும் விடுதலை) அத்தியாவசியம் என்னும் குழுவினருக்கும் கொள்கைப் போர் மூண்டு கொண்டிருக்கிறது. போதிய பாதுகாப்பு இல்லாமல் ஒரு நாடு தன்னிச்சையாக வளர்ச்சி காண முடியாது என்னும் வாதத்தை மறுக்க முடியாது எனினும் வளர்ச்சி இல்லாத நாட்டுக்கு எதற்கு பாதுகாப்பு என்னும் வாதத்தையும் மறுக்க இயலாது.
மேற்கூறிய அனைத்தும் வெறும் அறிவுஜீவித் தனமான விவாதங்களல்ல. இவை தேசிய, உலக அரங்குகளில் அரங்கேற்றப்படுபவை. நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் எத்தகைய இந்தியாவை நம் குழந்தைகள் சுவீகரித்துக் கொள்வார்கள் என்று நிர்ணயிக்கும். இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியர்கள் உலக மக்கட் தொகையில் ஆறில் ஒரு பங்கு இருந்ததால், இந்த முடிவுகள் உலகம் முழுதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.
இப்ப மீண்டும் நான். என்ன? மண்டை காயுதா? முன்னுரை கொஞ்சம் இறுக்கமான மொழியில் தான் இருக்கிறது. போகப் போக ..... நீங்கள் இந்த மொழிக்குப் பழகி விடுவீர்கள். எவ்வளவு பதிவுகள் நமீதா இடுப்பு, சச்சின் கவர் டிரைவ், அனுஜன்யா கவிதைகள், தமன்னா ஸ்டில்ஸ் என்று அதி முக்கிய விஷயங்கள் படிக்கிறோம். கொஞ்சம் ஓய்வெடுக்க இந்த மாதிரியும் படிக்கலாமேன்னு.....
இனி அடுத்த வாரம் பார்க்கலாம். வர்ட்டா?
the Elephant, the Tiger & the Cellphone என்ற தலைப்பில்
சென்ற வாரம் பரோடாவிலிருந்து வேலை மாறி சென்னை சென்ற என் nephew (மருமகன் என்றால் என்னோட யூத் இமேஜ் என்னாவது?) விமானத்தில் எடை அதிகமாவதைப் பற்றி கவலைப்பட்ட போது, என்னாலான சிறிய உதவி என்று இந்தப் புத்தகத்தை அவனிடமிருந்து ...அதென்ன...லபக்கிவிட்டேன். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்தியா பற்றிய சிந்தனை என்று பொத்தாம் பொதுவாக இந்தப் புத்தகத்தைப் பற்றி (படிக்காமலேயே) சொல்லலாம் என்று நினைக்கிறேன். சஷி தரூரின் பல காலக் கட்டுரைகளால் நிரம்பிய இந்தப் புத்தகத்திலிருந்து அவ்வப்போது சிலவற்றை எழுதலாம் என்று நினைக்கிறேன்.
இதில் நிறைய அனுகூலங்கள்: பதிவெழுத மேட்டர் கிடைக்கிறது; கற்பனை வறட்சி பற்றி கவலைப்பட வேண்டாம்; எதிர் வினைகள் வந்தால், 'அதானே, இது என் கருத்து இல்லை சார்/மேடம்' என்று சொல்லி நழுவலாம்; 'மொழியாக்கம்' ஸ்பெஷலிஸ்ட் என்று போர்டு போட்டுக்கொள்ளலாம்.
இனி Over to Mr.Sashi.
முன்னுரை: ஏன் இந்தியா முக்கியமாகிறது?
2007 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர இந்தியாவுக்கு அறுபது வயதானது. இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்தியாவுக்கு என்ன வாய்ப்புகள் தரவிருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில் ஏன் அவசியமாகிறது?
பிரித்தானிய வரலாற்றாளர் E.P.தாம்சன் அவர்களின் கூற்றுப்படி "இந்தியா, எதிர்கால உலகின் மிக முக்கியமான நாடாகும்". நான் இத்தகைய தீர்ப்பைச் சொல்ல முடியாவிடினும் பத்து வருடங்கள் முன்னர் எனது 'இந்தியா - நள்ளிரவிலிருந்து நூற்றாண்டு வரை' என்ற புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டில் இவ்வுலகம் எதிர்நோக்கும் மிக முக்கியமான விவாதங்களின் நாற்சந்திகளில் இந்தியர்கள் நிற்பதைக் கண்டேன்.
உணவா - விடுதலையா என்ற விவாதம்: ஜனநாயகம் ஏழ்மையைப் போக்கும் சாதனங்களைத் தர வல்லதா அல்லது அதன் கட்டுவிக்கப்பட்ட திறமையின்மைகள் வேகமான வளர்ச்சியைத் தடை செய்கிறதா? ஒரு வளரும் நாட்டுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத, தற்காலிக கூட்டணியாட்சி முறை ஒத்து வருமா? இன்றைய தலைமுறை பொருளீட்டுவதில் மட்டும் நாட்டம் கொள்ளும் சூழலில், அரசியல் சுதந்திரம் ஒரு தேவையற்ற கவனச் சிதறல் எனலாமா?
மையக்கட்டுப்பாடா மாநில சுயாட்சியா விவாதம்: நாளைய இந்தியா ஒரு வலுவான மைய அரசால் - மொழி, சாதி, பிராந்திய விடயங்களால் துண்டாகும் போக்கினைக் கட்டுப்படுத்தும் ஆளுமையுடைய அரசால் - ஆளப்பட வேண்டுமா அல்லது மையக்கட்டுப்பாடு இல்லாத அரசே சிறந்ததா? ஆண்டிப்பட்டியையும், அருணாச்சலப் பிரதேசத்தையும் பாதிக்கும் ஒவ்வொரு முடிவும் டில்லியில் தான் எடுக்கப்பட வேண்டுமா?
பன்முகமா, அடிப்படைவாதமா என்னும் விவாதம்: பல இனக்குடிகள் இருக்கும் நாட்டில் அரசியல் சாசனத்தில் உருவாக்கப்பட்ட (மேற்கத்திய நாடுகளின் கவர்ச்சியில் ஏற்பட்டது என்று தாக்கப்படும்) மதற்சார்பின்மை இன்றியமையாததா அல்லது இந்தியா, மற்ற பல மூன்றாம் உலக நாடுகள் போல, ஏறக்குறைய நம் எல்லா அண்டைநாடுகள் போல, நம்முடைய பிரத்யேக மத அடையாளத்துடன் திகழ்வதில் நாட்டம் செலுத்த வேண்டுமா?
கோகோ-கோலாநைசெஷன் விவாதம் அல்லது உலகமயமாக்கலா சுயச்சார்மையா விவாதம்: நாற்பது ஆண்டுகளாக தன்-நிறைவு என்னும் தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்த இந்தியா உலகப் பொருளாதாரத்திற்கு தன் கதவுகளை இன்னும் திறக்க வேண்டுமா அல்லது மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் அதன் ஊடே, அனுமதிக்கவே தகாத சீரழிவுகளை இந்திய சமுதாயத்தில் கொணருமா?
MTV யின் கேடுவிளைவிக்கும் மோகவலையில் இருந்து நம் இளைஞர்களைப் பாதுகாக்க, வேலிகளை உயர்த்த வேண்டுமா?
நான் என்னுடைய புத்தகத்தில் சொல்லாத ஐந்தாம் விவாதமும் இருக்கிறது. என்னுடைய அப்போதைய எஜமானர்களான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டுக்கு மதிப்பளித்து அதை எழுதவில்லை. துப்பாக்கியா-நெய்யா (Guns vs Butter) என்னும் விவாதம்: தேசப்பாதுகாப்பு செலவா அல்லது வளர்ச்சிக்கான நிதியா என்னும் விவாதம். பயங்கரவாதத்தின் புது அச்சுறுத்தல்களுடனும் புதுப்பிக்கப்படும் அணு ஆயுதப் போரின் சாத்தியங்களிலும் தொடங்கிய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தற்போது இராணுவப் பாதுகாப்பு (அயல் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவது)அவசியம் என்பவர்களுக்கும் மனிதப் பாதுகாப்பே (பசிப்பிணியிலிருந்தும், வாழ்வில் நம்பிக்கை இழந்த நிலையிலிருந்தும் விடுதலை) அத்தியாவசியம் என்னும் குழுவினருக்கும் கொள்கைப் போர் மூண்டு கொண்டிருக்கிறது. போதிய பாதுகாப்பு இல்லாமல் ஒரு நாடு தன்னிச்சையாக வளர்ச்சி காண முடியாது என்னும் வாதத்தை மறுக்க முடியாது எனினும் வளர்ச்சி இல்லாத நாட்டுக்கு எதற்கு பாதுகாப்பு என்னும் வாதத்தையும் மறுக்க இயலாது.
மேற்கூறிய அனைத்தும் வெறும் அறிவுஜீவித் தனமான விவாதங்களல்ல. இவை தேசிய, உலக அரங்குகளில் அரங்கேற்றப்படுபவை. நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் எத்தகைய இந்தியாவை நம் குழந்தைகள் சுவீகரித்துக் கொள்வார்கள் என்று நிர்ணயிக்கும். இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியர்கள் உலக மக்கட் தொகையில் ஆறில் ஒரு பங்கு இருந்ததால், இந்த முடிவுகள் உலகம் முழுதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.
இப்ப மீண்டும் நான். என்ன? மண்டை காயுதா? முன்னுரை கொஞ்சம் இறுக்கமான மொழியில் தான் இருக்கிறது. போகப் போக ..... நீங்கள் இந்த மொழிக்குப் பழகி விடுவீர்கள். எவ்வளவு பதிவுகள் நமீதா இடுப்பு, சச்சின் கவர் டிரைவ், அனுஜன்யா கவிதைகள், தமன்னா ஸ்டில்ஸ் என்று அதி முக்கிய விஷயங்கள் படிக்கிறோம். கொஞ்சம் ஓய்வெடுக்க இந்த மாதிரியும் படிக்கலாமேன்னு.....
இனி அடுத்த வாரம் பார்க்கலாம். வர்ட்டா?
Tuesday, October 20, 2009
நம்பிக்கைத் துரோகம்

கற்பனை வறட்சி, சுய சிந்தனையின்மை போன்ற உபாதைகளில் அடிக்கடி நான் அவதிப்படுவதால், அவ்வப்போது ஆங்கிலத்தில் படித்தவற்றில் சிலவற்றை மொழியாக்கம் செய்யும் உத்தேசம் இப்போது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கதை, கவிதை, கட்டுரை என்று. எப்படி இருந்தாலும் ரொம்ப பாவம்தான் நீங்கள்!
இந்த முறை ஒரு Topical கவிதை
இந்த முறை ஒரு Topical கவிதை
நம்பிக்கைத் துரோகம்
எவ்வாறு நான் ஒருவரை நம்ப முடியும்
அவ்வொருவர் என் நம்பிக்கையைத் தகர்த்தபின்
என் இதயம் வெறுமையாக
பனிக்கட்டி போல் உறைந்து
உடையும் தறுவாயில்
நீர் கசிகிறது
அந்நீர் சொட்டி, வழிந்தோடுகிறது
அந்த நம்பிக்கை
அந்தத் தருணம்
அதற்குள் இருந்த எல்லாவற்றையும்
நீ உடைத்தெறிந்து விட்டாய்
உன்னையோ உன் நண்பர்களையோ
நம்புவதற்கில்லை
ஆனால் நாம் நண்பர்களில்லை என்றில்லை
வெறும் நட்பு - நம்பிக்கையற்ற நட்பு மட்டுமே
என் நம்பிக்கையை மீள்பெற நீ முயன்றிட வேண்டும்
உன்னை மீண்டும் எப்போதேனும் நம்புவதற்கான
காரணங்களை எனக்குப் புரியச் செய்
உடைந்த நம்பிக்கைகளை
சீரமைக்க வேண்டும்
நீ கடினமாக முயல வேண்டும்
அதற்காக நீ என்னை
வெறுக்கவேண்டும் என்றில்லை
உன்னை மீண்டும் நம்பலாமென
எனக்குக் காண்பியேன்
(Jennifer Rondeau என்னும் கவிதாயினியின் ஆங்கிலக் கவிதையிலிருந்து (முடிந்தவரை) மொழியாக்கம். )
என் பிரிய ஜ்யோவுக்காக :((
எவ்வாறு நான் ஒருவரை நம்ப முடியும்
அவ்வொருவர் என் நம்பிக்கையைத் தகர்த்தபின்
என் இதயம் வெறுமையாக
பனிக்கட்டி போல் உறைந்து
உடையும் தறுவாயில்
நீர் கசிகிறது
அந்நீர் சொட்டி, வழிந்தோடுகிறது
அந்த நம்பிக்கை
அந்தத் தருணம்
அதற்குள் இருந்த எல்லாவற்றையும்
நீ உடைத்தெறிந்து விட்டாய்
உன்னையோ உன் நண்பர்களையோ
நம்புவதற்கில்லை
ஆனால் நாம் நண்பர்களில்லை என்றில்லை
வெறும் நட்பு - நம்பிக்கையற்ற நட்பு மட்டுமே
என் நம்பிக்கையை மீள்பெற நீ முயன்றிட வேண்டும்
உன்னை மீண்டும் எப்போதேனும் நம்புவதற்கான
காரணங்களை எனக்குப் புரியச் செய்
உடைந்த நம்பிக்கைகளை
சீரமைக்க வேண்டும்
நீ கடினமாக முயல வேண்டும்
அதற்காக நீ என்னை
வெறுக்கவேண்டும் என்றில்லை
உன்னை மீண்டும் நம்பலாமென
எனக்குக் காண்பியேன்
(Jennifer Rondeau என்னும் கவிதாயினியின் ஆங்கிலக் கவிதையிலிருந்து (முடிந்தவரை) மொழியாக்கம். )
என் பிரிய ஜ்யோவுக்காக :((
Sunday, June 21, 2009
சிங்கள அரசு பிணக்குவியலின் மேல் ஈட்டிய வெற்றி (?)

ஈழத்தில் சிங்கள அரசு கையாண்ட போர்முறைகள், தமிழின மக்கள் பிணக்குவியலாக மாறுவதை இராணுவத் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்பே உணர்ந்த சிங்கள அரசு, குரல்வளை நெரிக்கப்பட்ட சிறிலங்காவின் ஊடகங்கள் என்று மிகக் கவலைக்கிடமான விடயங்களைப் பகிர்ந்துகொண்ட சுனிலா அபயசெகராவின் ஆங்கில நேர்காணலின் இன்னொரு பகுதி. இதன் காணொளி வளர்மதியின் பதிவில் காணலாம். நேர்காணல் செய்தவர் ஷார்மினி பெரிஸ் என்னும் பத்திரிகையாளர்.
இப்போது நேர்காணலின் தமிழாக்கம்:
ஷார்மினி: சுனிலா, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் - சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் - எல்லோருக்கும்; விடுதலைக்குப் போராடிய பலர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் - சிங்கள இராணுவத்திடம் தோற்றுவிட்ட விடுதலைப் புலிகளை எண்ணி - உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது தற்போது?
சுனிலா: ம்ம், எம்மைப் போன்ற மனித உரிமைப் போராளிகளும், சிறி லங்கப் போருக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண முயன்றவர்களுக்கும் - மிக மனவழுத்தம் தரும் தருணம் இது. ஏனெனில் - இந்த போர் நிகழ்ந்த முறையும், பன்னாட்டு அரசுகள் இதை எதிர்கொண்ட விதமும் - தற்போது நடப்பவையும் - ஒரு விதமான அமானுஷ்ய அமைதி நிலவும் சூழல் - உள்நாட்டிலும், வெளியிலும்; இவற்றைத் தாங்கவே முடியாததாக இருக்கிறது. ஏனென்றால், நான் என் வாழ்நாளில் முப்பது வருடங்களை சிறிலங்காவில் மனித உரிமை போராட்டங்களில் செலவழித்தவள். சில தருணங்கள் கையறு நிலையை உணர்ந்திருக்கிறோம் - இதற்கு முன்பே இவ்விதம் ஒருமுறை உணர்ந்ததை நான் சொல்ல வேண்டும் - எண்பதுகளில் ஏராளமானோர் சிறிலங்காவில் காணாமல் மறைந்த போழ்தில் - இம்மாதிரியான தருணங்களில் நாம் என்ன செய்தாலும் ஒரு வித்தியாசமும் ஏற்படப் போவதில்லை என்று உணர்ந்தது - இப்போது அப்படித்தான் உணர்கிறேன்.
ஷார்மினி: இது ஒரு நீண்ட யுத்தம். சிறிலங்கா இராணுவத்தின் புலிகளைத் தோற்கடிக்கும் திட்டம் வெகு நாட்கள் கிடப்பில் இருந்த ஒன்றுதான். 2006 ஆம் ஆண்டில் நீங்கள் இது புலிகளை வெல்வதற்கான ஒரு பாய்ச்சலின் ஆரம்பம் என்று கூறியிருந்தீர்கள். இது எவ்வாறு துவங்கியது? ஏன் துவங்கியது என்று விளக்க முடியுமா?
சுனிலா: இந்த சிறிலங்க அரசு, முந்தைய எல்லா அரசுகளைக் காட்டிலும் புலிகளை, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களிலிருந்து வெளியேற்ற இராணுவத் திட்டத்தைத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தை முதலில் 2006 இலும், பிறகு தற்போது முடிவடைந்திருக்கும் வன்னியிலும்.
முதலிலிருந்தே - 2006 ஆம் ஆண்டின் நடுவில் என்று எண்ணுகிறேன் - இந்த இராணுவத் தாக்குதல் குடிமக்களுக்கு நேரக்கூடிய பின்விளைவுகளையோ, குடிமக்கள் மரிப்பதைப் பற்றியோ சற்றும் பொருட்படுத்தாமல் முன்னேறப் போவதின் அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தது. வாஹரில் நடந்தேறிய 'வான் குண்டு மழை' ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். ஆனால் அரசு அதனை மறுத்தது. எப்போதும் போலவே. அரசு, நாட்டின் கிழக்குப் பகுதி ஒரு துளி இரத்தமும் சிந்தப்படாமல் விடுவிக்கப் பட்டதாகவே எப்போதும் சொல்லி வந்தது. ஆனால், குறைந்தது நூறு பேர்கள் அந்த 'வான் குண்டு மழையில்' உயிரிழந்ததை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். இவற்றைச் சரியாகக் கணிக்காமல் விட்டதும், இம்மாதிரி நிகழ்வுகள் ஒரு விதிவிலக்குகள் என்று எண்ணி வாளாயிருந்ததும் முக்கிய விடயங்களாகத் தோன்றுகிறது.
ஷார்மினி: எதனை கணிக்கத் தவறவிட்டீர்கள்?
சுனிலா: இந்த முறை அரசின் வேறுபட்ட அணுகுமுறையை. குடிமக்கள் மாள்வது போரில் முன்னேற ஒரு தடையாக இருக்காது என்ற முடிவுடன் இந்த அரசு இருந்ததாக எண்ணுகிறேன். முந்தைய அரசுகள் ஒவ்வொரு முறையும் இனிமேல் நடவடிக்கை எடுத்தால் அது குடிமக்களை வெகுவாக பாதிக்கும் என்ற நிலையை எதிர்கொண்டபோது, இராணுவம் ஒரு அளவுக்கு மேல் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், 2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசு தனது இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டது - குடி மக்கள் மரிக்கத்தான் செய்வார்கள். அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற தெளிவான திட்டத்துடன்.
ஷார்மினி: இந்த அரசுக்கு இது ஒரு புதிய துணிச்சலா? பன்னாட்டு அரசுகளின் அங்கிகாரத்துடன் அவர்கள் எண்ணுவதைச் சாதிக்கலாம் என்னும் முனைப்பு.
சுனிலா: இந்த வருடம் மார்ச் மாதம் நியூ யார்க் நகரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் இருக்கையில் இலங்கையில் குடிமக்களுக்கு நேரப்போகும் நட்டம் பெருமளவு இருக்கப்போகிறது என்று தெளிவாகத் தெரிந்தது. பல்வேறு பன்னாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளிடத்தும், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளிடத்தும் நான் பேசுகையில், அவர்கள் எல்லோருமே இந்த போர் இப்படித் தான் செல்லும்; மேலும் தற்போது ஒரு சாராரே வென்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். இந்த ஒரு காரணம் காட்டி, பல்வேறு உலக நாடுகளும் நம் எல்லோரையும் - தமிழர், சிங்களர், சிறிலங்காவில் அமைதியை விரும்பிய ஒவ்வொரு குடிமகன் என்று எல்லோரையும் - கைவிட்டு விட்டன.
ஷார்மினி: இத்தகைய அணுகுமுறையின் விலை மிக அதிகம் ..
சுனிலா: இந்தப் போரில் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளானது ஜனநாயகம் தான் என்று எண்ணுகிறேன்; ஏனெனில் கடந்த 3 - 4 ஆண்டுகளில் தொடர்ந்து நடந்தேறிய இராணுவத் திட்டங்களுடன் - கூடவே நடைவேறிய அரசியல் திட்டமும் - எல்லா முடிவுகளையும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு அப்பால் வைப்பதே அந்த அரசியல் திட்டம் - இன்று நம்மிடம் உள்ள பாராளுமன்றமும், அமைச்சரவையும் நாட்டில் நடப்பது பற்றி துளியும் அறிந்திராத ஒரு நிலை. அனைத்து இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் தீர்மானங்கள் ஜனாதிபதியிடம் நேரிடையாக வேலை பார்க்கும் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் பாரளுமன்ற முறைகளுக்கு அப்பாலேயே செயல்படுகின்றனர். ஆகையினால் நிகழ்வுகளுக்குப் பொறுப்பு ஏற்பது, ஜனநாயக மரபுகள் போன்ற விடயங்களே இந்தப் போரினால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு.
ஷார்மினி: இத்தகைய ஜனநாயக மரபுகள் எவை என்று சொல்ல முடியுமா?
சுனிலா: ம்ம், ஒரு எடுத்துக்காட்டுக்கு இதைக் கூறலாம் - கடந்த மூன்றரை வருடங்களாக இராணுவ நடவடிக்கைகள் எப்போதுமே ஜனாதிபதியின் அலுவலகத்துள் உள்ள ஒரு சிறிய சிறப்புக் குழுமத்தால் எடுக்கப்பட்டன. இந்தக் குழுமத்தை வழி நடத்துவது ஜனாதிபதியின் சகோதரரும் இராணுவ அமைச்சகத்தின் செயலாளரும் ஆக இருப்பவர். பல தருணங்களில் நாங்கள் பல அமைச்சர்களிடம் - இராணுவம் இவ்வாறு செயல் படப் போகிறது; அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் தறுவாயில் உள்ளது; நீங்கள் தலையிட்டு இவற்றை நிறுத்த முடியுமா - என்றெல்லாம் சொல்கையில், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி ஒன்றும் தெரிந்து இருக்கவில்லை. அரசின் வாதம் எப்போதுமே "விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாதிகளுடன் போரிடுகையில் இந்த அணுகுறை அவசியமே' என்னும் ரீதியில் இருக்கிறது. ஆனால், என் எண்ணத்தில் இதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் - எதற்கும் பதில் சொல்ல அவசியமில்லாத நிலை போன்ற பின்விளைவுகள். இதன் விளைவாக, ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், 2006 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுள்ள பொது மக்கள் படுகொலைகளுக்கு இராணுவம் பொறுப்பு ஏற்காத நிலை என்னும் உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை. உங்களுக்குத் தெரியும் - பல்லாயிரக் கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளால் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று - ஆயினும், அதற்குப் பொறுப்பேற்க ஒருவரும் இல்லை. மறுப்பு ஒன்றே நாம் காண்பது. ஏனெனில் ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்புக்குள் இவை நடக்கவில்லை - எங்களால் எமது கேள்விகளை எங்கே, எவ்வாறு முன்வைப்பது என்று புரியாத நிலை - பாதுகாப்பு அமைச்சகம் சென்றால் அது முழுதும் மறைக்கப் பட்டு, பூசி மெழுகப் படுகிறது.
ஷார்மினி: ஜனநாயகம் பாதிப்புக்குள்ளாவது மற்றும் ஊடகத்துறையின் பங்கு இவைகளைப் பற்றிப் பேசுகையில் ஊடகத் துறையினரும் உங்கள் போன்ற களப்போராளிகளும் வெகு காலமாக அச்சுறுத்தப் பட்டும், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டும் உள்ளனர். இத்தகைய நீண்ட வரலாற்றை அவதானித்த உங்களைப் போன்றவர்களுக்கும், மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கும் என்ன நடக்கிறது இங்கு?
சுனிலா: சிறிலங்க அரசு தனது இராணுவத் தாக்குதல்களுடன் கூடவே மிக வலிமையான பிரசார உத்தியை மேற்கொண்டுள்ளது - தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத தொலைகாட்சி, வானொலி நிலையங்கள், நாட்டு மக்களைச் சென்றடையாத நிலை - மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இவர்தம் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை இவற்றை மாசுபடுத்தி, ஊழல், பணக் கையாடல், முறைகேடுகள் என்று பலவகைகளில் இவர்களை தனிப்பட்ட முறையில் தவறாகச் சித்தரித்தல் என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை இவற்றை அச்சுறுத்துவதுடன் நில்லாது எந்த ஒரு அமைப்புமே சுதந்திரமாகச் செயல் பட முடியாத நிலை - பல்வேறு பொதுமக்கள் நல நிறுவனங்கள் பாராளுமன்ற உப-குழுக்கள் முன்பு தருவிக்கப் பட்டு, பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு, நிதியுதவி மறுக்கப்பட்டு, பன்னாட்டு மனித நேய நிறுவங்களின் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை செய்யும் அனுமதி நிராகரிக்கப்பட்டு அல்லது தாமதப் படுத்தப்பட்டு - என்று பலவித இன்னல்கள். ஒரு திட்டமிட்ட முறையில் சமுதாயத்தின் குரலை, உரிமையை மறுப்பது என்பது நடந்திருக்கிறது. குறிவைக்கப்பட்ட தனிப்பட்டவர்களை அச்சுறுத்தல்களுக்கும், சீண்டல்களுக்கும் ஆளாக்குதல் - சிறிலங்க அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தைப் பார்த்தால் இவை நன்றாக விளங்கும் - ஏனெனில் அத்தளத்தில் பல்வேறு தனிப்பட்ட, குறிவைக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி எப்போதும் கட்டுரைகள், செய்திகள் தவறான முறையில் வெளிவரும். நாங்கள் எல்லோரும் அத்தகைய தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் தாம்.
ஷார்மினி: நீங்களும் இந்த நாட்டில் பாதுகாப்பாக உணரவில்லையா?
சுனிலா: இல்லை. நான் கடந்த வருடம் வெளியேறினேன். நான் சிறிலங்காவுக்கு வருவதும் போவதுமாக இருந்தாலும் சற்றும் பாதுகாப்புணர்வுடன் இல்லை. சிறிலங்கா மாதிரியான நாட்டில் உள்ள சிரமம் என்னவெனில் எனக்கு அபாயமென்றால், அது மற்றவர்க்கும் அவ்வாறே ஆவதுதான். ஆகையால், நான் வெளியேறுகிறேன் என்று அறிவித்த போது என் அலுவலகத்திலும், என் வீட்டிலும் ஒவ்வொருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அது எவ்வளவு சோகம் - என் அன்னை இரவில் நன்றாகத் துயில வேண்டுமென்றால் நான் விலக வேண்டும் என்னும் நிலை.
இப்போது நேர்காணலின் தமிழாக்கம்:
ஷார்மினி: சுனிலா, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் - சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் - எல்லோருக்கும்; விடுதலைக்குப் போராடிய பலர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் - சிங்கள இராணுவத்திடம் தோற்றுவிட்ட விடுதலைப் புலிகளை எண்ணி - உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது தற்போது?
சுனிலா: ம்ம், எம்மைப் போன்ற மனித உரிமைப் போராளிகளும், சிறி லங்கப் போருக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண முயன்றவர்களுக்கும் - மிக மனவழுத்தம் தரும் தருணம் இது. ஏனெனில் - இந்த போர் நிகழ்ந்த முறையும், பன்னாட்டு அரசுகள் இதை எதிர்கொண்ட விதமும் - தற்போது நடப்பவையும் - ஒரு விதமான அமானுஷ்ய அமைதி நிலவும் சூழல் - உள்நாட்டிலும், வெளியிலும்; இவற்றைத் தாங்கவே முடியாததாக இருக்கிறது. ஏனென்றால், நான் என் வாழ்நாளில் முப்பது வருடங்களை சிறிலங்காவில் மனித உரிமை போராட்டங்களில் செலவழித்தவள். சில தருணங்கள் கையறு நிலையை உணர்ந்திருக்கிறோம் - இதற்கு முன்பே இவ்விதம் ஒருமுறை உணர்ந்ததை நான் சொல்ல வேண்டும் - எண்பதுகளில் ஏராளமானோர் சிறிலங்காவில் காணாமல் மறைந்த போழ்தில் - இம்மாதிரியான தருணங்களில் நாம் என்ன செய்தாலும் ஒரு வித்தியாசமும் ஏற்படப் போவதில்லை என்று உணர்ந்தது - இப்போது அப்படித்தான் உணர்கிறேன்.
ஷார்மினி: இது ஒரு நீண்ட யுத்தம். சிறிலங்கா இராணுவத்தின் புலிகளைத் தோற்கடிக்கும் திட்டம் வெகு நாட்கள் கிடப்பில் இருந்த ஒன்றுதான். 2006 ஆம் ஆண்டில் நீங்கள் இது புலிகளை வெல்வதற்கான ஒரு பாய்ச்சலின் ஆரம்பம் என்று கூறியிருந்தீர்கள். இது எவ்வாறு துவங்கியது? ஏன் துவங்கியது என்று விளக்க முடியுமா?
சுனிலா: இந்த சிறிலங்க அரசு, முந்தைய எல்லா அரசுகளைக் காட்டிலும் புலிகளை, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களிலிருந்து வெளியேற்ற இராணுவத் திட்டத்தைத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தை முதலில் 2006 இலும், பிறகு தற்போது முடிவடைந்திருக்கும் வன்னியிலும்.
முதலிலிருந்தே - 2006 ஆம் ஆண்டின் நடுவில் என்று எண்ணுகிறேன் - இந்த இராணுவத் தாக்குதல் குடிமக்களுக்கு நேரக்கூடிய பின்விளைவுகளையோ, குடிமக்கள் மரிப்பதைப் பற்றியோ சற்றும் பொருட்படுத்தாமல் முன்னேறப் போவதின் அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தது. வாஹரில் நடந்தேறிய 'வான் குண்டு மழை' ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். ஆனால் அரசு அதனை மறுத்தது. எப்போதும் போலவே. அரசு, நாட்டின் கிழக்குப் பகுதி ஒரு துளி இரத்தமும் சிந்தப்படாமல் விடுவிக்கப் பட்டதாகவே எப்போதும் சொல்லி வந்தது. ஆனால், குறைந்தது நூறு பேர்கள் அந்த 'வான் குண்டு மழையில்' உயிரிழந்ததை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். இவற்றைச் சரியாகக் கணிக்காமல் விட்டதும், இம்மாதிரி நிகழ்வுகள் ஒரு விதிவிலக்குகள் என்று எண்ணி வாளாயிருந்ததும் முக்கிய விடயங்களாகத் தோன்றுகிறது.
ஷார்மினி: எதனை கணிக்கத் தவறவிட்டீர்கள்?
சுனிலா: இந்த முறை அரசின் வேறுபட்ட அணுகுமுறையை. குடிமக்கள் மாள்வது போரில் முன்னேற ஒரு தடையாக இருக்காது என்ற முடிவுடன் இந்த அரசு இருந்ததாக எண்ணுகிறேன். முந்தைய அரசுகள் ஒவ்வொரு முறையும் இனிமேல் நடவடிக்கை எடுத்தால் அது குடிமக்களை வெகுவாக பாதிக்கும் என்ற நிலையை எதிர்கொண்டபோது, இராணுவம் ஒரு அளவுக்கு மேல் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், 2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசு தனது இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டது - குடி மக்கள் மரிக்கத்தான் செய்வார்கள். அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற தெளிவான திட்டத்துடன்.
ஷார்மினி: இந்த அரசுக்கு இது ஒரு புதிய துணிச்சலா? பன்னாட்டு அரசுகளின் அங்கிகாரத்துடன் அவர்கள் எண்ணுவதைச் சாதிக்கலாம் என்னும் முனைப்பு.
சுனிலா: இந்த வருடம் மார்ச் மாதம் நியூ யார்க் நகரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் இருக்கையில் இலங்கையில் குடிமக்களுக்கு நேரப்போகும் நட்டம் பெருமளவு இருக்கப்போகிறது என்று தெளிவாகத் தெரிந்தது. பல்வேறு பன்னாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளிடத்தும், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளிடத்தும் நான் பேசுகையில், அவர்கள் எல்லோருமே இந்த போர் இப்படித் தான் செல்லும்; மேலும் தற்போது ஒரு சாராரே வென்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். இந்த ஒரு காரணம் காட்டி, பல்வேறு உலக நாடுகளும் நம் எல்லோரையும் - தமிழர், சிங்களர், சிறிலங்காவில் அமைதியை விரும்பிய ஒவ்வொரு குடிமகன் என்று எல்லோரையும் - கைவிட்டு விட்டன.
ஷார்மினி: இத்தகைய அணுகுமுறையின் விலை மிக அதிகம் ..
சுனிலா: இந்தப் போரில் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளானது ஜனநாயகம் தான் என்று எண்ணுகிறேன்; ஏனெனில் கடந்த 3 - 4 ஆண்டுகளில் தொடர்ந்து நடந்தேறிய இராணுவத் திட்டங்களுடன் - கூடவே நடைவேறிய அரசியல் திட்டமும் - எல்லா முடிவுகளையும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு அப்பால் வைப்பதே அந்த அரசியல் திட்டம் - இன்று நம்மிடம் உள்ள பாராளுமன்றமும், அமைச்சரவையும் நாட்டில் நடப்பது பற்றி துளியும் அறிந்திராத ஒரு நிலை. அனைத்து இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் தீர்மானங்கள் ஜனாதிபதியிடம் நேரிடையாக வேலை பார்க்கும் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் பாரளுமன்ற முறைகளுக்கு அப்பாலேயே செயல்படுகின்றனர். ஆகையினால் நிகழ்வுகளுக்குப் பொறுப்பு ஏற்பது, ஜனநாயக மரபுகள் போன்ற விடயங்களே இந்தப் போரினால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு.
ஷார்மினி: இத்தகைய ஜனநாயக மரபுகள் எவை என்று சொல்ல முடியுமா?
சுனிலா: ம்ம், ஒரு எடுத்துக்காட்டுக்கு இதைக் கூறலாம் - கடந்த மூன்றரை வருடங்களாக இராணுவ நடவடிக்கைகள் எப்போதுமே ஜனாதிபதியின் அலுவலகத்துள் உள்ள ஒரு சிறிய சிறப்புக் குழுமத்தால் எடுக்கப்பட்டன. இந்தக் குழுமத்தை வழி நடத்துவது ஜனாதிபதியின் சகோதரரும் இராணுவ அமைச்சகத்தின் செயலாளரும் ஆக இருப்பவர். பல தருணங்களில் நாங்கள் பல அமைச்சர்களிடம் - இராணுவம் இவ்வாறு செயல் படப் போகிறது; அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் தறுவாயில் உள்ளது; நீங்கள் தலையிட்டு இவற்றை நிறுத்த முடியுமா - என்றெல்லாம் சொல்கையில், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி ஒன்றும் தெரிந்து இருக்கவில்லை. அரசின் வாதம் எப்போதுமே "விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாதிகளுடன் போரிடுகையில் இந்த அணுகுறை அவசியமே' என்னும் ரீதியில் இருக்கிறது. ஆனால், என் எண்ணத்தில் இதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் - எதற்கும் பதில் சொல்ல அவசியமில்லாத நிலை போன்ற பின்விளைவுகள். இதன் விளைவாக, ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், 2006 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுள்ள பொது மக்கள் படுகொலைகளுக்கு இராணுவம் பொறுப்பு ஏற்காத நிலை என்னும் உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை. உங்களுக்குத் தெரியும் - பல்லாயிரக் கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளால் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று - ஆயினும், அதற்குப் பொறுப்பேற்க ஒருவரும் இல்லை. மறுப்பு ஒன்றே நாம் காண்பது. ஏனெனில் ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்புக்குள் இவை நடக்கவில்லை - எங்களால் எமது கேள்விகளை எங்கே, எவ்வாறு முன்வைப்பது என்று புரியாத நிலை - பாதுகாப்பு அமைச்சகம் சென்றால் அது முழுதும் மறைக்கப் பட்டு, பூசி மெழுகப் படுகிறது.
ஷார்மினி: ஜனநாயகம் பாதிப்புக்குள்ளாவது மற்றும் ஊடகத்துறையின் பங்கு இவைகளைப் பற்றிப் பேசுகையில் ஊடகத் துறையினரும் உங்கள் போன்ற களப்போராளிகளும் வெகு காலமாக அச்சுறுத்தப் பட்டும், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டும் உள்ளனர். இத்தகைய நீண்ட வரலாற்றை அவதானித்த உங்களைப் போன்றவர்களுக்கும், மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கும் என்ன நடக்கிறது இங்கு?
சுனிலா: சிறிலங்க அரசு தனது இராணுவத் தாக்குதல்களுடன் கூடவே மிக வலிமையான பிரசார உத்தியை மேற்கொண்டுள்ளது - தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத தொலைகாட்சி, வானொலி நிலையங்கள், நாட்டு மக்களைச் சென்றடையாத நிலை - மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இவர்தம் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை இவற்றை மாசுபடுத்தி, ஊழல், பணக் கையாடல், முறைகேடுகள் என்று பலவகைகளில் இவர்களை தனிப்பட்ட முறையில் தவறாகச் சித்தரித்தல் என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை இவற்றை அச்சுறுத்துவதுடன் நில்லாது எந்த ஒரு அமைப்புமே சுதந்திரமாகச் செயல் பட முடியாத நிலை - பல்வேறு பொதுமக்கள் நல நிறுவனங்கள் பாராளுமன்ற உப-குழுக்கள் முன்பு தருவிக்கப் பட்டு, பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு, நிதியுதவி மறுக்கப்பட்டு, பன்னாட்டு மனித நேய நிறுவங்களின் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை செய்யும் அனுமதி நிராகரிக்கப்பட்டு அல்லது தாமதப் படுத்தப்பட்டு - என்று பலவித இன்னல்கள். ஒரு திட்டமிட்ட முறையில் சமுதாயத்தின் குரலை, உரிமையை மறுப்பது என்பது நடந்திருக்கிறது. குறிவைக்கப்பட்ட தனிப்பட்டவர்களை அச்சுறுத்தல்களுக்கும், சீண்டல்களுக்கும் ஆளாக்குதல் - சிறிலங்க அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தைப் பார்த்தால் இவை நன்றாக விளங்கும் - ஏனெனில் அத்தளத்தில் பல்வேறு தனிப்பட்ட, குறிவைக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி எப்போதும் கட்டுரைகள், செய்திகள் தவறான முறையில் வெளிவரும். நாங்கள் எல்லோரும் அத்தகைய தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் தாம்.
ஷார்மினி: நீங்களும் இந்த நாட்டில் பாதுகாப்பாக உணரவில்லையா?
சுனிலா: இல்லை. நான் கடந்த வருடம் வெளியேறினேன். நான் சிறிலங்காவுக்கு வருவதும் போவதுமாக இருந்தாலும் சற்றும் பாதுகாப்புணர்வுடன் இல்லை. சிறிலங்கா மாதிரியான நாட்டில் உள்ள சிரமம் என்னவெனில் எனக்கு அபாயமென்றால், அது மற்றவர்க்கும் அவ்வாறே ஆவதுதான். ஆகையால், நான் வெளியேறுகிறேன் என்று அறிவித்த போது என் அலுவலகத்திலும், என் வீட்டிலும் ஒவ்வொருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அது எவ்வளவு சோகம் - என் அன்னை இரவில் நன்றாகத் துயில வேண்டுமென்றால் நான் விலக வேண்டும் என்னும் நிலை.
Tuesday, June 16, 2009
சிறி லங்காவில் என்னதான் நடக்கிறது? - காணாமல் போகும் தமிழ் சிறார்கள்
ஈழத்தில் தடுப்பு முகாம்களின் நிலை குறித்து சுனிலா அபயசெகராவின் நேர்காணல்.
நேர்காணல் செய்தவர் டோரோண்டோவில் இருந்து வரும் ரியல் நியூஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியின் ஷார்மினி பெரிஸ் என்னும் பத்திரிக்கையாளர்.
சுனிலா நன்கறியப்பட்ட மனித உரிமை களப்பணியாளர். Information Monitor (INFORM) என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குனராக இருப்பவர். இனப்போரில் பிளந்துபட்டு நிற்கும் சிங்கள மற்றும் தமிழ் என்று இவ்விரு இன மக்களின் மதிப்பைப் பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபையின் சில உச்ச விருதுகளை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் பெற்றவர்.
ஆங்கில நேர்காணலின் காணொளியை வளர்மதியின் தளத்தில் காணலாம்.
இப்போது நேர்காணலின் தமிழாக்கம்:
ஷார்மினி: எங்களுடன் இன்று பகிர வந்ததற்கு நன்றி
சுனிலா : இங்கு வந்ததில் மகிழ்ச்சி
ஷார்மினி : சுனிலா, ம், மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்க்கப்பட்டு இருக்கிறார்கள் - ஏறக்குறைய சிறைச் சாலை முகாம்கள் என்று பலராலும் வர்ணிக்கப்படும் இடங்களில்; நீங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள்? அங்கிருக்கும் நிலைமை என்ன?
சுனிலா : இதில் பெரிய விடயம் இம்மக்கள் பல மாதங்களாக பல அடிப்படை வசதி, உரிமைகள் மறுக்கப்பட்டு இந்த முகாம்களுக்குக் கொணரப் பட்டவர்கள் என்பதே கவனிக்கப் படவில்லை. பசியில் உணவின்றி, தாகத்திற்கு நீரின்றித் தவித்து, உடலில் திரவச்சத்து இழந்து, சீழ் பிடித்த காயங்களுடன் பலமாதங்களாக அல்லலுற்றவர்கள். அதனாலேயே அவர்களை உடனடியாகக் கவனிப்பது மிக அவசியமாகிறது. தற்போது நாம் கேள்விப்படுவது என்னவெனில் பெரும்பாலான மனித நேய நிறுவனங்களுக்கு இம்மக்களை அடைவதற்கு கட்டுப்பாடற்ற தொடர்பு அனுமதிக்கப் படாததால், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிட்டாமல் இருக்கிறார்கள். ஏப்ரல் 27 ஆம் திகதி வவுன்னியாவின் உயர்நீதி மன்ற நீதிபதி அன்றைய தினம் 14 முதியோர்கள் பசியால் இறந்ததை பதிவு செய்து, அரசை முதியோர்களைக் கவனிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.இது ஒரு உதாரணம் மட்டுமே.
ஷார்மினி : பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு உட்சென்று உதவி செய்வதை அரசாங்கத்தை எது தடுக்கிறது?
சுனிலா : இந்த மூன்று இலட்சம் மக்களில் புலிகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பது அரசின் வாதம். நாமும், இது உண்மையாக இருக்கக் கூடுமென்று ஒப்புக் கொள்கிறோம். எங்களின் எதிர்ப்பு எல்லாம் அரசு முன்வைக்கும் திட்டத்திற்கு தான்: "மக்களை முதலில் சல்லடையில் சலித்து பிறகு அவர்களை பிறர் தொடர்பு கொள்ள அனுமதிப்பது"; நாங்கள் சொல்வதெல்லாம், "அவ்வாறு மக்களை பரிசோதிக்கும் போதே அவர்களைத் தொடர்பு கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று". "அத்தகைய சோதனை, சார்பில்லாத பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்"
நாங்கள் அறிவது என்னவெனில் இந்த முகாம்கள் உண்மையில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக உள்ளன. ஏனெனில் இவற்றைக் கண்காணிப்பது இராணுவம்; மக்கள் நடமாட்டம் பெரிதும் கட்டுப்படுத்தப் படுகிறது; பல வேலிகளைத் தாண்டினால் ஒழிய அங்கிருந்து விலக முடியாது; அவர்களை யாரும் வந்து பார்க்கவும் கூடாது; உப ராணுவம் எனப்படும் 'முன்னர் புலிகளுடன் இருந்து பின் பிரிந்து சென்ற' குழுக்கள், முகமூடி போர்த்திய 'தகவல் சொல்பவர்'களுடன் இந்த முகாம்களுக்குள் உட்புகுந்து, சிலரை அடையாளம் காட்டி, இந்த முகாம்களிலிருந்து வெளியே கொண்டு செல்லப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் 11 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 200 சிறார்கள் மணிக்வா முகாமிலிருந்து நிருங்குளம் தொழிற்கல்வி கல்லூரி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக கேள்விப்பட்டோம். ஆனால் ஒரு பட்டியலும் இல்லை. பெற்றோர்கள் பதட்ட நிலையில் காணப்படுகிறார்கள். நாங்கள் கேட்பதெல்லாம் ஒரு பட்டியல் மட்டுமே. இந்த மூன்று இலட்சம் மாந்தரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்க வேண்டும்; அப்போதுதான் இது போல யாராவது ஒருவர் இந்த முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்கு மாற்றப்பட்டால், அதற்கு யாரேனும் பொறுப்பேற்க முடியும். தற்போது இந்தகைய பட்டியல் பதிவில் இல்லை; ஆதலால் இது போல மக்கள் திடிரென்று காணாமல் போகும் நிகழ்வுகள் நடக்கின்றன; அது எங்களுக்கு மிகுந்த கவலையைத் தருகிறது.
ஷார்மினி :பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் இதனுட்சென்று உதவி செய்யத் தயாராக உள்ளனவா?
சுனிலா : ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகமும் (UNHCR) மற்றும் செஞ்சிலுவைச் சங்கமும் (ICRC) இத்தகைய மேற்பார்வையிடுதல், பதிவு செய்தல் போன்ற பணிகளில் திறமை படைத்த நிறுவனங்கள் ஆகும். ஆனால், தற்போது அவர்களுக்கு இதில் ஈடுபட அனுமதி இல்லை.
ஷார்மினி : காணாமல் போய்விடுவோர் பற்றி - உறுதியான தகவல்கள் ஏதாவது கேள்விப் படுகிறீர்களா?
சுனிலா : இந்த முகாம்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டு - காணாமல் போனவர்கள் - எங்களால் அதனைக் கனானிக்க இயலாத சூழல் - சிறி லங்கா அரசு புலிகள் என்று சொல்லப்படும் 10,000 பேர்கள் சரணடைந்து, தங்கள் தடுப்பு முகாம்களில் இருப்பதாக ஒப்புக் கொள்கிறது. அவர்கள் யாரென்று தெரியவில்லை; அவர்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடம் இல்லை. உங்களுக்கே தெரியும் எத்தனை பேர் இறுதி தினங்களில் கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டார்கள் என்று; புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் துணைவியரும், குடும்பத்தினர்களும். ஒரு உதாரணத்திற்கு சூசை அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் சிறி லங்க கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று இப்போது தெரியாது. ஆதலால், இது போன்ற குறிப்பிட்ட விடயங்களிலாவது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் அறிய முயல்கிறோம். ஆயினும், அது முடியாத காரியமாகவே உள்ளது.
ஷார்மினி : இந்தத் தடுப்பு முகாம்களில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி - அபு கரிப் (ஈராக்) சிறையில் நடந்தேறியது போல - செய்திகள் வருகின்றன. நீங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள்?
சுனிலா : உங்களுக்கே தெரியும் - சிறி லங்கா உளவுத்துறையின் சித்திரவதை சிறப்புகள் பற்றி - ஐக்கிய நாடுகள் சபையின் இயக்குனர் மால்ஃபாய் டோவக் அவர்களின் 2007 இல் நடந்த சிறிலங்க விஜயத்தின் போது அளித்த அறிக்கை அப்போதிருந்த நிலைமை பற்றி மோசமாக விமர்சித்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசர நிலை சட்டம் - இவற்றின் அடியில் பிடிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல - சாதாரண சிறைச்சாலைகளில் இருந்தவர்கள் கூட - அவதிப் பட்டார்கள். சித்ரவதையை விடுங்கள் - கும்பலாக அடைத்தல், மருத்துவ வசதி தராமல் இருத்தல் மற்றும் அடித்து, பானைத் தண்ணீர் சித்ரவதை - இப்படி நிறைய கேள்விப்பட்டோம். இத்தகைய சித்ரவதைக்குள்ளான ஏராளமானோர், கனடா, யு.எஸ். மற்றும் யு.கே. ஆகிய நாடுகளில் தஞ்சம் புகும்போது அளித்த ஆவணங்களில் இது பற்றி சொல்லியிருக்கிறார்கள். இந்த தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகள் பற்றி போதிய ஆதாரங்கள் இருக்கின்றன என்றே சொல்வேன்.
ஷார்மினி : தற்போது சிறிலங்கா அரசின் மீது எத்தகைய அழுத்தம் கொடுக்க இயலும்? யாரால் தர இயலும்?
சுனிலா : தற்போதைய நிலையில் உலக நாடுகள் செய்யக்கூடியதெல்லாம் சிறி லங்கா அரசை இந்த தடுப்பு முகாம்களை அணுகுவதற்கு உள்ள தடைகளை நீக்கவும், முகாம்களில் அடைபட்டிருப்பவர்கள் விவரங்கள், முகாம்களில் இடம் பெயர்க்கப்படப் போகிறவர்களைப் பற்றிய விவரங்கள் போன்றவற்றைக் குறிப்பெடுத்துப் பதிவது - இவைகளைக் கோருவது தான்; இவைகள் மிக அடிப்படையான தேவைகள் மட்டுமே - புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடவேயில்லை என்று நாங்கள் சொல்லவில்லை; அவர்களைப் போக விடுங்கள் என்று சொல்லவில்லை; நாங்கள் சொல்வதெல்லாம், ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள். அதனை எல்லோரும் அறியச் செய்யுங்கள்.
இறந்த ஒவ்வொருவருக்கும் - சமீபத்தில் நடந்தேறிய ராணுவத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியாது - சுமார் 20,000 பேர் என்று செய்திகள் வந்தாலும், அரசு இதனை மறுக்கவே செய்கிறது - இறந்த ஒவ்வொருவருக்கும் கனடா, யு.கே., ஜெர்மனி, பிரான்ஸ் இந்த நாடுகளில் உறவினர் உள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் பாட்டி, அத்தை, மாமா, சகோதரி, சகோதரன் என்று உறவு முறைகள் காணாமல் போய்விட்ட, இறந்து விட்ட நிகழ்வுகள் உள்ளன. இந்த புலம் பெயர்ந்த தமிழின மக்களுக்காகவேனும் சிறிலங்கா அரசின் மனிதாபிமானமற்ற செயலான உண்மை நிலையை மறுத்தல் என்பது மாற வேண்டும் - இவர்கள் முகாம்களிலோ, வைத்திய சாலைகளிலோ, சிறைகளில் அடைக்கப்பட்டோ இருக்கிறார்கள் - இந்த மூன்றிலும் இல்லை என்றால் அவர்கள் இறந்தவர்கள் - என்று தெரிய வேண்டும். நமக்குத் தெரிய வேண்டும்; மக்களுக்குத் தெரிய வேண்டும்; இதுவே சிறிலங்கா தமிழர்களுக்காக பன்னாட்டு அரசுகள் செய்யக்கூடிய செயலாகும்.
ஷார்மினி : யாரந்த பன்னாட்டு சமூகம்? சிறி லங்கா அரசின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய நிறுவனங்கள் அல்லது நாடுகள் எவை?
சுனிலா : சீனா, ஜப்பான், பிரேசில், தென் ஆப்பிரிக்கா. இந்த நான்கு நாடுகள் குரல் கொடுத்தால் - மனிதாபிமான கொள்கைகளுக்காக, முகாம்களுக்குத் தடையற்ற அணுகுமுறை, முகாம்களில் உள்ளோரின் மொத்தப் பட்டியல் போன்ற அடிப்படை விடயங்கள்.
ஷார்மினி : ஏன் இந்த நாடுகள்?
சுனிலா : சிறி லங்கா அரசுடனான இவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளுக்காக - அமெரிக்க, கனடா, ஐரோப்பா இந்த இடங்களிலிருந்து வரும் அழுத்தங்களை சிறி லங்கா அரசு எதிர்க்கிறது - ஏகாதிபத்திய அரசுகளின் காலனிய சதி என்ற ரீதியில் - ஆனால் - இந்த நான்கு நாடுகள் தென்பிராந்திய சக பயணிகள். நீங்கள் அறிவீர்கள் - சீனா சிறிலங்காவில் கணிசமான முதலீடு செய்திருக்கிறது; சிறிலங்கா அரசுக்கு ஏராளமான கடன் வசதிகளும், நிதியுதவி உறுதிமொழிகளும் சீனாவிடம் இருந்து கிடைத்திருக்கிறது. பிரேசில் நாட்டவர்களுக்கும் தென்பிராந்திய, அணி-சேரா நாடுகளிடையே மதிப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்காவை சிறி லங்கா - தென் பிராந்திய ஜனநாயகங்களின் ஒரு பிரதிநிதியாகவே நோக்குகிறது. ஆகையால், இந்த நாடுகளுக்கு இத்தகைய ஆளுமைகள் உள்ளன. இருப்பினும் அவர்கள் இந்த நிலையை இவ்வாறு புரிந்து கொள்ளாதது சோகமே. இவற்றைச் செய்வதால் இந்த நாடுகளுக்கு ஒன்றும் நட்டமில்லை.
பின் குறிப்பு: சில பெயர்கள்/இடங்கள் போன்றவற்றில் பரிச்சயம் இல்லாமையால் தவறாக இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. சுட்டினால் திருத்திக் கொள்ளலாம்.
நேர்காணல் செய்தவர் டோரோண்டோவில் இருந்து வரும் ரியல் நியூஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியின் ஷார்மினி பெரிஸ் என்னும் பத்திரிக்கையாளர்.
சுனிலா நன்கறியப்பட்ட மனித உரிமை களப்பணியாளர். Information Monitor (INFORM) என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குனராக இருப்பவர். இனப்போரில் பிளந்துபட்டு நிற்கும் சிங்கள மற்றும் தமிழ் என்று இவ்விரு இன மக்களின் மதிப்பைப் பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபையின் சில உச்ச விருதுகளை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் பெற்றவர்.
ஆங்கில நேர்காணலின் காணொளியை வளர்மதியின் தளத்தில் காணலாம்.
இப்போது நேர்காணலின் தமிழாக்கம்:
ஷார்மினி: எங்களுடன் இன்று பகிர வந்ததற்கு நன்றி
சுனிலா : இங்கு வந்ததில் மகிழ்ச்சி
ஷார்மினி : சுனிலா, ம், மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்க்கப்பட்டு இருக்கிறார்கள் - ஏறக்குறைய சிறைச் சாலை முகாம்கள் என்று பலராலும் வர்ணிக்கப்படும் இடங்களில்; நீங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள்? அங்கிருக்கும் நிலைமை என்ன?
சுனிலா : இதில் பெரிய விடயம் இம்மக்கள் பல மாதங்களாக பல அடிப்படை வசதி, உரிமைகள் மறுக்கப்பட்டு இந்த முகாம்களுக்குக் கொணரப் பட்டவர்கள் என்பதே கவனிக்கப் படவில்லை. பசியில் உணவின்றி, தாகத்திற்கு நீரின்றித் தவித்து, உடலில் திரவச்சத்து இழந்து, சீழ் பிடித்த காயங்களுடன் பலமாதங்களாக அல்லலுற்றவர்கள். அதனாலேயே அவர்களை உடனடியாகக் கவனிப்பது மிக அவசியமாகிறது. தற்போது நாம் கேள்விப்படுவது என்னவெனில் பெரும்பாலான மனித நேய நிறுவனங்களுக்கு இம்மக்களை அடைவதற்கு கட்டுப்பாடற்ற தொடர்பு அனுமதிக்கப் படாததால், அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிட்டாமல் இருக்கிறார்கள். ஏப்ரல் 27 ஆம் திகதி வவுன்னியாவின் உயர்நீதி மன்ற நீதிபதி அன்றைய தினம் 14 முதியோர்கள் பசியால் இறந்ததை பதிவு செய்து, அரசை முதியோர்களைக் கவனிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.இது ஒரு உதாரணம் மட்டுமே.
ஷார்மினி : பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு உட்சென்று உதவி செய்வதை அரசாங்கத்தை எது தடுக்கிறது?
சுனிலா : இந்த மூன்று இலட்சம் மக்களில் புலிகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பது அரசின் வாதம். நாமும், இது உண்மையாக இருக்கக் கூடுமென்று ஒப்புக் கொள்கிறோம். எங்களின் எதிர்ப்பு எல்லாம் அரசு முன்வைக்கும் திட்டத்திற்கு தான்: "மக்களை முதலில் சல்லடையில் சலித்து பிறகு அவர்களை பிறர் தொடர்பு கொள்ள அனுமதிப்பது"; நாங்கள் சொல்வதெல்லாம், "அவ்வாறு மக்களை பரிசோதிக்கும் போதே அவர்களைத் தொடர்பு கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று". "அத்தகைய சோதனை, சார்பில்லாத பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்"
நாங்கள் அறிவது என்னவெனில் இந்த முகாம்கள் உண்மையில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக உள்ளன. ஏனெனில் இவற்றைக் கண்காணிப்பது இராணுவம்; மக்கள் நடமாட்டம் பெரிதும் கட்டுப்படுத்தப் படுகிறது; பல வேலிகளைத் தாண்டினால் ஒழிய அங்கிருந்து விலக முடியாது; அவர்களை யாரும் வந்து பார்க்கவும் கூடாது; உப ராணுவம் எனப்படும் 'முன்னர் புலிகளுடன் இருந்து பின் பிரிந்து சென்ற' குழுக்கள், முகமூடி போர்த்திய 'தகவல் சொல்பவர்'களுடன் இந்த முகாம்களுக்குள் உட்புகுந்து, சிலரை அடையாளம் காட்டி, இந்த முகாம்களிலிருந்து வெளியே கொண்டு செல்லப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் 11 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 200 சிறார்கள் மணிக்வா முகாமிலிருந்து நிருங்குளம் தொழிற்கல்வி கல்லூரி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக கேள்விப்பட்டோம். ஆனால் ஒரு பட்டியலும் இல்லை. பெற்றோர்கள் பதட்ட நிலையில் காணப்படுகிறார்கள். நாங்கள் கேட்பதெல்லாம் ஒரு பட்டியல் மட்டுமே. இந்த மூன்று இலட்சம் மாந்தரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்க வேண்டும்; அப்போதுதான் இது போல யாராவது ஒருவர் இந்த முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்கு மாற்றப்பட்டால், அதற்கு யாரேனும் பொறுப்பேற்க முடியும். தற்போது இந்தகைய பட்டியல் பதிவில் இல்லை; ஆதலால் இது போல மக்கள் திடிரென்று காணாமல் போகும் நிகழ்வுகள் நடக்கின்றன; அது எங்களுக்கு மிகுந்த கவலையைத் தருகிறது.
ஷார்மினி :பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் இதனுட்சென்று உதவி செய்யத் தயாராக உள்ளனவா?
சுனிலா : ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகமும் (UNHCR) மற்றும் செஞ்சிலுவைச் சங்கமும் (ICRC) இத்தகைய மேற்பார்வையிடுதல், பதிவு செய்தல் போன்ற பணிகளில் திறமை படைத்த நிறுவனங்கள் ஆகும். ஆனால், தற்போது அவர்களுக்கு இதில் ஈடுபட அனுமதி இல்லை.
ஷார்மினி : காணாமல் போய்விடுவோர் பற்றி - உறுதியான தகவல்கள் ஏதாவது கேள்விப் படுகிறீர்களா?
சுனிலா : இந்த முகாம்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டு - காணாமல் போனவர்கள் - எங்களால் அதனைக் கனானிக்க இயலாத சூழல் - சிறி லங்கா அரசு புலிகள் என்று சொல்லப்படும் 10,000 பேர்கள் சரணடைந்து, தங்கள் தடுப்பு முகாம்களில் இருப்பதாக ஒப்புக் கொள்கிறது. அவர்கள் யாரென்று தெரியவில்லை; அவர்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடம் இல்லை. உங்களுக்கே தெரியும் எத்தனை பேர் இறுதி தினங்களில் கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டார்கள் என்று; புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் துணைவியரும், குடும்பத்தினர்களும். ஒரு உதாரணத்திற்கு சூசை அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் சிறி லங்க கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று இப்போது தெரியாது. ஆதலால், இது போன்ற குறிப்பிட்ட விடயங்களிலாவது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் அறிய முயல்கிறோம். ஆயினும், அது முடியாத காரியமாகவே உள்ளது.
ஷார்மினி : இந்தத் தடுப்பு முகாம்களில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி - அபு கரிப் (ஈராக்) சிறையில் நடந்தேறியது போல - செய்திகள் வருகின்றன. நீங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள்?
சுனிலா : உங்களுக்கே தெரியும் - சிறி லங்கா உளவுத்துறையின் சித்திரவதை சிறப்புகள் பற்றி - ஐக்கிய நாடுகள் சபையின் இயக்குனர் மால்ஃபாய் டோவக் அவர்களின் 2007 இல் நடந்த சிறிலங்க விஜயத்தின் போது அளித்த அறிக்கை அப்போதிருந்த நிலைமை பற்றி மோசமாக விமர்சித்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசர நிலை சட்டம் - இவற்றின் அடியில் பிடிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல - சாதாரண சிறைச்சாலைகளில் இருந்தவர்கள் கூட - அவதிப் பட்டார்கள். சித்ரவதையை விடுங்கள் - கும்பலாக அடைத்தல், மருத்துவ வசதி தராமல் இருத்தல் மற்றும் அடித்து, பானைத் தண்ணீர் சித்ரவதை - இப்படி நிறைய கேள்விப்பட்டோம். இத்தகைய சித்ரவதைக்குள்ளான ஏராளமானோர், கனடா, யு.எஸ். மற்றும் யு.கே. ஆகிய நாடுகளில் தஞ்சம் புகும்போது அளித்த ஆவணங்களில் இது பற்றி சொல்லியிருக்கிறார்கள். இந்த தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகள் பற்றி போதிய ஆதாரங்கள் இருக்கின்றன என்றே சொல்வேன்.
ஷார்மினி : தற்போது சிறிலங்கா அரசின் மீது எத்தகைய அழுத்தம் கொடுக்க இயலும்? யாரால் தர இயலும்?
சுனிலா : தற்போதைய நிலையில் உலக நாடுகள் செய்யக்கூடியதெல்லாம் சிறி லங்கா அரசை இந்த தடுப்பு முகாம்களை அணுகுவதற்கு உள்ள தடைகளை நீக்கவும், முகாம்களில் அடைபட்டிருப்பவர்கள் விவரங்கள், முகாம்களில் இடம் பெயர்க்கப்படப் போகிறவர்களைப் பற்றிய விவரங்கள் போன்றவற்றைக் குறிப்பெடுத்துப் பதிவது - இவைகளைக் கோருவது தான்; இவைகள் மிக அடிப்படையான தேவைகள் மட்டுமே - புலிகள் பயங்கரவாதத்தில் ஈடுபடவேயில்லை என்று நாங்கள் சொல்லவில்லை; அவர்களைப் போக விடுங்கள் என்று சொல்லவில்லை; நாங்கள் சொல்வதெல்லாம், ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள். அதனை எல்லோரும் அறியச் செய்யுங்கள்.
இறந்த ஒவ்வொருவருக்கும் - சமீபத்தில் நடந்தேறிய ராணுவத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியாது - சுமார் 20,000 பேர் என்று செய்திகள் வந்தாலும், அரசு இதனை மறுக்கவே செய்கிறது - இறந்த ஒவ்வொருவருக்கும் கனடா, யு.கே., ஜெர்மனி, பிரான்ஸ் இந்த நாடுகளில் உறவினர் உள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் பாட்டி, அத்தை, மாமா, சகோதரி, சகோதரன் என்று உறவு முறைகள் காணாமல் போய்விட்ட, இறந்து விட்ட நிகழ்வுகள் உள்ளன. இந்த புலம் பெயர்ந்த தமிழின மக்களுக்காகவேனும் சிறிலங்கா அரசின் மனிதாபிமானமற்ற செயலான உண்மை நிலையை மறுத்தல் என்பது மாற வேண்டும் - இவர்கள் முகாம்களிலோ, வைத்திய சாலைகளிலோ, சிறைகளில் அடைக்கப்பட்டோ இருக்கிறார்கள் - இந்த மூன்றிலும் இல்லை என்றால் அவர்கள் இறந்தவர்கள் - என்று தெரிய வேண்டும். நமக்குத் தெரிய வேண்டும்; மக்களுக்குத் தெரிய வேண்டும்; இதுவே சிறிலங்கா தமிழர்களுக்காக பன்னாட்டு அரசுகள் செய்யக்கூடிய செயலாகும்.
ஷார்மினி : யாரந்த பன்னாட்டு சமூகம்? சிறி லங்கா அரசின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய நிறுவனங்கள் அல்லது நாடுகள் எவை?
சுனிலா : சீனா, ஜப்பான், பிரேசில், தென் ஆப்பிரிக்கா. இந்த நான்கு நாடுகள் குரல் கொடுத்தால் - மனிதாபிமான கொள்கைகளுக்காக, முகாம்களுக்குத் தடையற்ற அணுகுமுறை, முகாம்களில் உள்ளோரின் மொத்தப் பட்டியல் போன்ற அடிப்படை விடயங்கள்.
ஷார்மினி : ஏன் இந்த நாடுகள்?
சுனிலா : சிறி லங்கா அரசுடனான இவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளுக்காக - அமெரிக்க, கனடா, ஐரோப்பா இந்த இடங்களிலிருந்து வரும் அழுத்தங்களை சிறி லங்கா அரசு எதிர்க்கிறது - ஏகாதிபத்திய அரசுகளின் காலனிய சதி என்ற ரீதியில் - ஆனால் - இந்த நான்கு நாடுகள் தென்பிராந்திய சக பயணிகள். நீங்கள் அறிவீர்கள் - சீனா சிறிலங்காவில் கணிசமான முதலீடு செய்திருக்கிறது; சிறிலங்கா அரசுக்கு ஏராளமான கடன் வசதிகளும், நிதியுதவி உறுதிமொழிகளும் சீனாவிடம் இருந்து கிடைத்திருக்கிறது. பிரேசில் நாட்டவர்களுக்கும் தென்பிராந்திய, அணி-சேரா நாடுகளிடையே மதிப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்காவை சிறி லங்கா - தென் பிராந்திய ஜனநாயகங்களின் ஒரு பிரதிநிதியாகவே நோக்குகிறது. ஆகையால், இந்த நாடுகளுக்கு இத்தகைய ஆளுமைகள் உள்ளன. இருப்பினும் அவர்கள் இந்த நிலையை இவ்வாறு புரிந்து கொள்ளாதது சோகமே. இவற்றைச் செய்வதால் இந்த நாடுகளுக்கு ஒன்றும் நட்டமில்லை.
பின் குறிப்பு: சில பெயர்கள்/இடங்கள் போன்றவற்றில் பரிச்சயம் இல்லாமையால் தவறாக இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. சுட்டினால் திருத்திக் கொள்ளலாம்.
Thursday, November 20, 2008
துயிலும் பெண்
எனக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ்ரா. அவரது இணையதளமும் எனக்குப் பிடித்த இணையங்களுள் ஒன்று.
அண்மையில் எஸ்ரா சிரியா நாட்டின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர் அவர்களின் சிறுகதை பற்றி இவ்வாறு எழுதியிருந்தார்.
"சிரியாவின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர். சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைகளில் இதுவே மிகச்சிறந்த கதை என்பேன். இரண்டு பக்க அளவேயான கதை. ஒரு சிறுகதைக்குள் எவ்வளவு விஷயங்களை சொல்லிவிட முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. தமிழில் யாராவது மொழிபெயர்த்து வெளியிட்டால் சந்தோஷம் கொள்வேன்."
கதை எனக்கு வசீகரமாகவும், பல்வேறு எண்ணங்களையும் ஏற்படுத்தியது. இதனை மொழியாக்கம் செய்து பார்த்தால் என்ன என்று முயன்றேன். (சொந்தக் கற்பனை வறட்சி நிலவரம் என் கவிதைகள் படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்).
கதை படிக்க ஆசைப்படுவோர் இங்கு செல்லவும்: துயிலும் பெண்
பெரும் ஊக்கமளித்து இணையத்தில் என் பெயரையும் குறிப்பிட்ட, நான் மிக மதிக்கும் எஸ்ராவுக்கு நன்றிகள் பல.
இது பெரும் நாவலாக அல்லாது, இரண்டு பக்க சிறுகதை மட்டுமே என்பதாலும், மொழியாக்கத்தின் மொழியாக்கம் (அரேபிய-ஆங்கில-தமிழ்) என்பதாலும் "வருமொழி, நிலைமொழி, மொழியாக்கத்தில் வன்முறை" என்றெல்லாம் பெரிய விடயங்கள் பற்றி வெளிச்சம் காட்டிய வளர்மதியின் நினைவுகளைக் கிடப்பில் போட்டுவிட்டேன். பிழைகளை அன்னார் மன்னிப்பாராக.
அண்மையில் எஸ்ரா சிரியா நாட்டின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர் அவர்களின் சிறுகதை பற்றி இவ்வாறு எழுதியிருந்தார்.
"சிரியாவின் மிக முக்கிய எழுத்தாளர் ஜகரியா தமேர். சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைகளில் இதுவே மிகச்சிறந்த கதை என்பேன். இரண்டு பக்க அளவேயான கதை. ஒரு சிறுகதைக்குள் எவ்வளவு விஷயங்களை சொல்லிவிட முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. தமிழில் யாராவது மொழிபெயர்த்து வெளியிட்டால் சந்தோஷம் கொள்வேன்."
கதை எனக்கு வசீகரமாகவும், பல்வேறு எண்ணங்களையும் ஏற்படுத்தியது. இதனை மொழியாக்கம் செய்து பார்த்தால் என்ன என்று முயன்றேன். (சொந்தக் கற்பனை வறட்சி நிலவரம் என் கவிதைகள் படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்).
கதை படிக்க ஆசைப்படுவோர் இங்கு செல்லவும்: துயிலும் பெண்
பெரும் ஊக்கமளித்து இணையத்தில் என் பெயரையும் குறிப்பிட்ட, நான் மிக மதிக்கும் எஸ்ராவுக்கு நன்றிகள் பல.
இது பெரும் நாவலாக அல்லாது, இரண்டு பக்க சிறுகதை மட்டுமே என்பதாலும், மொழியாக்கத்தின் மொழியாக்கம் (அரேபிய-ஆங்கில-தமிழ்) என்பதாலும் "வருமொழி, நிலைமொழி, மொழியாக்கத்தில் வன்முறை" என்றெல்லாம் பெரிய விடயங்கள் பற்றி வெளிச்சம் காட்டிய வளர்மதியின் நினைவுகளைக் கிடப்பில் போட்டுவிட்டேன். பிழைகளை அன்னார் மன்னிப்பாராக.
Subscribe to:
Posts (Atom)
