
என்னுடைய கதை, ஜ்யோவின் விமர்சனம், அதற்குப் பின்னூட்டம் என்று எல்லாம் வந்திருக்கிறது. இப்போது நர்சிம் ஜ்யோவுக்கு பதில் சொல்கிறார் அல்லது கேள்வி கேட்கிறார். ஜீப்பில் ஏறிவிட்ட இன்னொரு 'ரவுடி'யின் நீண்ட பின்னூட்டத்தை புகைப்படத்துடன் இன்னொரு இடுகையாகப் போடுவது தானே நியாயம்? Here we go:
*******
சரி..விசயத்திற்கு வருவோம்..அல்லது இதைத் தனிப்பதிவாக பேஸ்ட் பண்ணி போடுங்க அனுஜன்யா...
*******
திரு சுந்தர்ஜிக்கு.
குரு வந்தனங்கள்.
ஒரு படத்தையோ அல்லது கதையையோ விமர்சனம் செய்வது என்பது முழுக்க முழுக்க உங்கள் உரிமை.அதில் இரு வேறு கருத்துகள் இல்லை.
ஆனால்...
உங்கள் கருத்து என்று ஒன்றை முதலிலேயே முடிவு செய்து கொண்டு,படைப்பை பார்க்கும் பொழுது அங்கே தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது..அல்லது ஆரம்பப் புள்ளி அதுதான்.
விமர்சகர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் விமர்சனம் செய்வார்கள் அல்லது செய்ய வேண்டும் எனபது என் கருத்து.
அடிப்படையான இரு விசயங்கள் அல்லது விடயங்கள்(இந்த விடயம்,வழமை போன்ற வார்த்தைகள் கொஞ்சம் இடிக்குமெனக்கு)
1.நீங்கள் ஒரு கடவுள் மறுப்பாளி
2.வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் கடவுளைக் கூட ஒத்துக்கொள்வீர்கள்.ஆனால் சுஜாதாவை ஒத்துக்கொள்ளாத ஆசாமி.
இந்த இரண்டு பாயிண்ட்டுகளும் மிக முக்கியமானவை..இந்த விமர்சனத்தைப் பொறுத்தவரை.
ஏனெனில் உங்கள் விமர்சனத்தின் மொத்த குத்தும் இந்த இரண்டில் தான் என்பது தெளிவாக இருக்கிறது.
நீங்கள் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதனாலேயே சரிபாதி ஈஸ்வரன் மேட்டரை பெண்களுக்கு கொடுத்தால் முழுதும் பிடுங்கிவிடுவார்கள் கபர்தார் என்ற தளத்திற்கு மாற்றிவிட்டீர்கள்.தவறாகப் படுகிறது.
அகோரி இந்து மத அல்லது நான் கடவுள் படம் பார்த்தபின் ஒரு இந்து தெரிந்து கொண்ட விசயம்.அதை தன்னளவில் இங்கே மொழிப் படுத்தி இருக்கிறார் படைப்பாளி.
அதுபோலவே சுஜாதா. அவரைப் பிடிக்காமல் போக உங்களுக்கு எப்படி ஆயிரம் காரணம் இருக்கிறதோ அதைவிட பல்லாயிரம் காரணம் படைப்பாளிக்கு அவரைப் பிடிப்பதற்கும் இருக்கலாம்.
ஆதாரத் தவறு என்று முடிவு செய்து கொண்டு நீங்கள் விமர்சித்தது தெளிவாகத் தெரிகிறது.
நுண்ணியப்பார்வை எல்லாம் ஓக்கே.ஆனால் உங்களின் அடிப்படைக் கருத்துகளுக்கு அது ஒத்துப்போகவில்லை என்பதனால் “ஆபத்தானது”போன்ற விமர்சனங்கள் ஏற்புடையதல்ல.
நல்ல கதை என்பதை விட சொன்ன விதமும் கையாளப்பட்ட நடையும் நிச்சயமாய் புதிதுதான்(சுஜாதாவைப் பிடிக்காததால் லேசான எரிச்சலின் ஊடே நீங்கள் படித்துக் கொண்டே வந்ததின் விளைவாகவே உங்களின் விமர்சனத்தைப் பார்க்கிறேன்).
கடவுளர் சார்ந்த கதைகளும் சுஜாதாவின் சுட்டு விரலை லேசாகப் பிடித்துக்கொண்டு நடந்ததும் மட்டுமே தவறாக தோன்றுகிறது உங்களுக்கு.
ஏனெனில்,நீங்கள் கொண்டாடும் கட்டுடைப்பு கதைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாத கதையை நீங்கள் விமர்சித்த முகாந்திரம் நான் மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன்.
அது உங்கள் கருத்து எனும் பட்சத்தில்,உங்களுக்கு இந்தக் கதை பிடிக்கவில்லை அல்லது கரு பிடிக்கவில்லை என்ற அளவே அன்றி ஒதுக்கப்படவேண்டியது எல்லாம் கொஞ்சம் ஓவர் ஸார்.