Saturday, February 14, 2009

உலகின் மிகச்சிறந்த காதல் வரிகள்



இந்த யூத்தா இருப்பதின் சோகங்கள்தான் எத்தனை!

பாருங்க இந்தத் திங்கள் கிழமையிலிருந்தே வானம் இலேசாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தத் சனிக்கிழமை அருகில் வர வர, முழு உலகுமே கொஞ்சங்கொஞ்சமாய் ரோஜா நிறத்திற்குத் தாவிக்கொண்டிருந்தது. என்னது, ஒண்ணும் புரியவில்லையா? இதுக்குத்தான் உங்கள மாதிரி பெருசுங்களோடப் பேசக் கூடாதென்பது! இருந்தாலும், வந்துட்டீங்க, விளக்கமா சொல்றேன்.

அதாகப் பட்டது இன்று பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி. காதலர் தினம். காதலின் நிறம் தெரியுமா? ம்ம், கேட்டிருக்கக்கூடாது, அது பிங்க் என்று ஆங்கிலத்திலும், ரோஜா நிறம் என்று அழகு தமிழிலும் சொல்வோம்.

பொதுவாகவே குழந்தைப் பருவத்திலேயே ஆணும், பெண்ணும் நிறவாரியாகப் பிரிக்கப் படுகிறோம். பிங்க் ஸ்கேர்ட், பிங்க் கவுன், பிங்க் ரிப்பன்/ஹெட் பேண்ட், பிங்க் வாட்ச், வளையல், பிங்க் சைக்கிள், பிங்க் காலணிகள், பிங்க் இடுப்புக் கச்சை (அதாங்க பெல்ட்) என்று சகலமும் பிங்க் பெண் குழந்தைகளுக்கு.

நமக்கு மஞ்சள் டிரௌசருக்கு ஆரஞ்சு கலர் சட்டை. பச்சை வண்ணத்தில் பூட்ஸ், சிகப்பு நிறத்தில் தொப்பி என்று மாடர்ன் ஆர்ட் போடமுடியாத குறையினை நம் மூலம் தீர்த்துக்கொள்ளும் பெற்றோர். எனக்கு சிறுவயதில் பிங்க் நிறத்தில் ஷூ போட்டுக்கொள்ள ஆசையாக இருந்தது முறியடிக்கப்பட்டது இந்தக் காரணங்களால்.

காதலர் தினம் பிங்க் வண்ணத்தில் நிரம்பித் தளும்புவதின் நுண்ணரசியல் இப்போது புரிகிறதா? எப்போதுமே தோற்கும் ஆண்வர்க்கம், உச்சக்கட்டமாகக்  காலில் சாஷ்டாங்கமாக விழும் நாளுக்கு 'காதலர் தினம்' என்று இப்போது பெயர் சூடப்பட்டிருக்கிறது.


நீங்கள் மணமானவரா? வருத்தங்கள். காதல் திருமணமில்லையே? தப்பித்தீர்கள். என்னது, ஆமா? ஐயோ பாவம், அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.

முன்னமே சொன்ன திங்கட் கிழமையிலிருந்து சமிக்ஞைகள் துவங்கின. முதலில் இந்த சானல்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். டேய், எப்பவுமே சனிக்கிழமை ஏதாவது ஒரு பாடாவதி காதல் படம் போடுவது வழக்கம்தானே. அது என்ன 'காதலர் தினத்தை முன்னிட்டு' என்று ஒரே ரோஜா நிற இதயங்கள் பின்னணியில் ஒரு அட்டகாச அறிவிப்பு! சும்மா இருக்கும் மனைவியை உசுப்பி விடும் அறிவிப்புகள்!


நான் கேட்கும் முன்னரே, "இந்த ரோஜாப்பு கொடுக்கும் காதலர்கள்/கணவர்கள் எல்லாம் ஏன் இவ்வளவு பிற்போக்கா இருக்காங்க" என்றாள். அப்பா, ஒரு வழியாக இந்தக் காதலர் தினம் நமக்கு ஒரு கவலையும் இல்லாமல் வந்து போகப் போகிறது என்ற எண்ணத்தில் மண். ‘ஒரு இன்வெஸ்ட்மென்டா கொஞ்சம் (!) தங்கமோ, வைரமோ வாங்கலாம். இப்பெல்லாம், அது கூட பாஷன் இல்ல. பிளாடினம் வாங்கலாம்’ என்ற கமெண்ட் அடுத்து வந்தது. இலேசாக வயிற்றைப் புரட்டியது. ஏற்கெனவே மாதாமாதம் பெஸ்டிவல் அட்வான்ஸ் (சிவராத்திரிக்கெல்லாம் பண்டிகை கொண்டாட பத்தாயிரம் வாங்கிய ஆள் நான் மட்டும்தான் இருப்பேன்) வாங்குபவன் என்ற அவப்பெயர்.

அலுவலக ஆடிட் மற்றும் அப்ரைசல் உபாதைகளுக்குக்கூட நான் இவ்வளவு பயந்ததில்லை. ஒரு பயப்பந்து வயிற்றில் மையம் கொண்டு, அவ்வப்போது ஆட்டம் காட்டியது. இப்படி அடுத்த மூன்று நாட்கள் ஊர்ந்து போக, மனைவி அவ்வப்போது மேலதிகாரியின் மிடுக்கில், பார்வையாலேயே 'என்ன மேன், இந்த வருடம் என்ன செய்யப் போற?' என்ற தொனியில் பார்த்து விட்டு நகர்ந்தாள்.

தள்ளிக்கொண்டே போன வேலை, கடைசியில் வேலை போகும் நிலையில் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வோமே, அதே மாதிரி வெள்ளிக்கிழமை மாலை எனக்கு இலேசாக ஜன்னி வந்துவிட்டது. நாளை கா.தினம். என்ன செய்வது?

திடீர்னு ஒரு போன். அவள் தான். 'ம்ம், எப்படி இருக்கீங்க' என்றாள், எதோ பத்து வருடம் முன் பிரிந்த காதலியைப் போல. 'ரொம்ப வேலை. ரொம்ப முக்கியம் உன்னோட குசல விசாரிப்பு இப்ப' என்று எண்ணிக்கொண்டே "என்னம்மா கண்ணு! என்ன அபூர்வமா இந்த நேரத்துல போன்" என்று வழிந்தேன். 'உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இருந்தாலும்... நாளைக்கு என்ன நாள் தெரியுமில்ல.. ' என்று நிறுத்தினாள். சரியான கிழமையில் தான் இந்த முறை வருகிறது. "தெரியாமலா.. ஞாபகம் இருக்கு" என்று பல்லைக் கடித்தேன்.

"நா உங்களுக்கு ஒரு கிப்ட் வாங்கியிருக்கேன். சோ கியுட்" என்றாள். அவள் இப்படிச் சிலாகித்துச் சொன்னால் பெரும்பாலும் கிலுகிலுப்பை அல்லது கை தட்டிக்கொண்டே தலையாட்டும் (கொஞ்சம் யோசித்தால் நானும் அதுதான்) பொம்மை போன்றவைகளே இருக்கும். "அப்படியா" என்றேன். "ஹம். அப்புறம், நீங்க எனக்காக எதுவும் காஸ்ட்லியா வாங்காதீங்க" என்றாள். தீர்ந்தது. இதற்கு உண்மையான அர்த்தம் இதுவரை ஆதங்கத்துடன் படிக்கும் உங்களுக்கும் புரிந்திருக்கும்.

"நிஜமாத்தான் சொல்றேன். தங்கம், வைரம்னு சும்மா தண்ட செலவு (இதோடா!) பண்ண வேண்டாம்"

"அப்ப ப்ளுடோனியமா"

"என்னது?"

"சாரி, ப்ளாடினமா?"

"இல்ல இல்ல. பணத்தில என்ன இருக்கு. இந்த வருடம் ஏதாவது வித்தியாசமான முறையில், காதல் பரிசு கொடுக்க ட்ரை பண்ணுங்களேன்"

சந்தோஷத்துல மிதந்தாலும் காட்டிக்கொள்ளாமல், "நீ என்ன சொல்ல வர" என்றேன்.

"எங்க லேடிஸ் க்ளப்ல இந்த வருஷம் 'சிறந்த காதல் பரிசுக்கு' ஒரு பரிசு கொடுக்கப் போறாங்க. நாம்ப காதலிச்சது (காண்க: இறந்த காலம்) எல்லாருக்கும் தெரியும். அதுனால, உங்க மூளைய யோசிச்சு புது மாதிரி எனக்கு ஒரு பரிசு கொடுங்க பார்க்கலாம். உலகமே புதுசா தெரியணும். பார்க்கணும். அப்படி இருக்கணும்"

எவ்வளவோ யோசிச்சும் ஒண்ணும் தட்டுப் படவில்லை. இரவு பத்து ஆகிவிட்டதால் வீடு போய் சேர்ந்து, சோர்ந்து படுத்துத் தூங்கி விட்டேன். காலையில் முழித்ததுமே வித்தியாசமாய் உணர்ந்தேன். இது என்ன வானம், பூமி, மரம், அதன் இலைகள் எல்லாமே பிங்க் நிறம்! அவளும் (எப்போதுமே அப்படித்தான்!). என்னோட வெள்ளக் கலர் டி-ஷர்ட் கூட ரோஜா வண்ணத்தில். எப்படி என்கிறீர்களா.. அப்புறம் சொல்றேன்.

நான் எழுந்தேன். பல் தேய்த்து, நிதானமாக காபி (அது கூட இலேசாக பழுப்பு-பிங்கில்) குடித்தேன். யதேற்சையாகப் கைகளைப் பின்பக்கம் கட்டிக்கொண்டதில் ஆவலாக "பின்னாடி என்ன கிப்ட்" என்றாள்.

நான் கணினி ஆன் செய்து நம்ம ப்ளாக் சென்று "இப்ப பாரு" என்றேன்.

அது சொன்னது இதுதான்.

"அனு,


உன்னுடன் நான் கழித்த


நொடிகளைத்தான்


உருக்கி வார்த்து


உலகம் கொண்டாடுகிறது


காதலர் தினமென...




நிறைய நீ;


கொஞ்சம் நானென


இன்னும் வாழ்கின்றன


காதலர் தினங்கள்..



உன் தொலைப்பேசி


முத்தங்களுக்கெல்லாம்


மௌனமே காக்கிறேன்


பரிசுகளாக திருப்பித்தர


காதலர் தினத்தை
எதிர்பார்த்து...

இப்படியெல்லாம் கவிதை எழுதி சொல்லலாம். நான் கேட்காமலேயே என் தங்கை இந்தக் கவிதைகள் நமக்காகவே எழுதி இருக்கா.

ஆனாலும், நான் உனக்காக மட்டும் எழுதும் வரிகள் இது தான்..

"
உன்னை எப்படிக் காதலித்தேனோ,
அப்படியே இன்னும் காதலிக்கறேன்
காதலித்துக்கொண்டு இருக்கிறேன்
இன்னும் பன்மடங்கு அதிகமாவும்
வரும் தினங்களில் காதலிப்பேன்"

எனக்குத் தெரிஞ்ச பிங்க் கலர்ல இந்த பதிவு முழுதும் தீட்டி விட்டேன். சப்தமே இல்லை. அபாய கட்டத்தை நெருங்கி விட்டோமோ என்று அஞ்சியபடி திரும்பினால், கண்களில் நீர்த்திரை. அழுதுகொண்டே, "தேங்க் யூ டா" என்றாள்.

இதுக்குப் பேர்தான் ஜாக்பாட். அதுக்கு அப்புறம் என்ன? ஒரே ராஜ மரியாதை தான்.

கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும் கேட்டேன். "ஏய் கிறுக்கு, இது கவிதை கூட இல்லை. சராசரிக்கும் கீழான உரைநடை; இதுக்கு போயி இவ்வளோவ் பீலிங்க்ஸா"

"இது கவிதை இல்ல தான். ஆனா, உண்மை இருக்கு. அழகு ஆடைகள் போர்த்தாமல், நிர்வாணமா இருந்தாலும், இது தான் நிதர்சனம். இதுதான் உண்மையான காதல்' என்றாள். தல கிறுகிறுன்னு சுத்தி, அவள் மடியில் சாய்ந்தேன்.

அப்புறம், அவள் இல்லாத போது திரும்ப படிச்சா, அவள் சொன்னதும் உண்மைதான் என்று தோன்றியது. மாலையில் நாங்கள் இருவரும் பேசும்போது பரஸ்பர பரிசுகளைப் பற்றி பேசினோம்.

"ஆமா, உலகமே வியந்து பார்க்கணும்னு சொன்னேனே? நீங்க எழுதினது எனக்கு நல்லா இருக்கு. ஆனாலும்..."

"அசடு, இந்தப் பதிவை உலகத்தில இருக்குற நிறைய தமிழர்கள் படிக்கிறாங்க. சில பேராவது, பரிதாபப் பட்டு இது ரொம்ப நல்லாயிருக்குன்னு புகழுவாங்க"

"உங்களுக்கு எப்படித் தெரியும் அவங்க வந்து புகழுவாங்கன்னு"

இப்படி ஆரம்பித்தது அவளுக்கு பதிவுலகம், பின்னூட்டம், பரஸ்பர புகழ், கும்மி போன்றவற்றின் பால பாடம். பதிவுலக அரசியல்... நமக்கே இன்னும் புரியல; ஆள வுடுங்க பாஸ்.

அப்புறம், எனக்குக் கிடைத்த பரிசு ஒரு தோசைக்கல் அளவில் வெய்யில் கண்ணாடி. ஆம், பிங்க் கலரில். அவளிடம் கேட்டேன் 'ஏய் என்ன இது"

"நல்லா இருக்குல்ல.. எம்.ஜி.ஆர். போடுவார்.. அதே மாதிரி"

"எம்.ஜி.ஆரா? - எந்தப் படத்துல? "

"இதயக்கனி"

சரியான பரிசுதான்.

டிஸ்கி: இந்தப் பதிவில் வந்த அழகிய கவிதையும், பொருத்தமான புகைப்படமும் பிரியமான தங்கை ஸ்ரீமதி பதிவிலிருந்து, அவர் (!) அனுமதி இல்லாமல் பதிவிட்டது. வந்து கோபித்துக் கொண்டால் "இலவசமாக விளம்பரம் கொடுத்தால் தவறா?" என்று சமாளிக்க உத்தேசம். நன்றி ஸ்ரீ.

62 comments:

மாதவராஜ் said...

அனுஜன்யா!

முதலில் காதலர் தின வாழ்த்துக்கள்.

உங்க முகம் தெரிந்தால் அந்த பிங்க் கலர் கண்னாடியோடு கொஞ்சம் கற்பனை செய்து பார்க்க முடியும். ம்...


//நீங்கள் மணமானவரா? வருத்தங்கள். காதல் திருமணமில்லையே? தப்பித்தீர்கள்.//
ஏனிப்படி? உரக்கச் சொல்கிறீர்கள்.

//வெள்ளிக்கிழமை மாலை எனக்கு இலேசாக ஜன்னி வந்துவிட்டது.//
ஏனோ இந்த இடத்தில் வாய்விட்டு சிரித்தேன்.

//சில பேராவது, பரிதாபப் பட்டு இது ரொம்ப நல்லாயிருக்குன்னு புகழுவாங்க//
அப்படி வேற தைரியமா?

அனுஜன்யா!
ரசித்து படிக்க முடிந்தது.
தொல்லையாக நிறைய எழுத்துப் பிழைகள். சரி பண்ணூங்க.

டிஸ்கியில், பிங்க் கலர் பல்பையும் குறிப்பிட்டு இருக்கலாம்.

முரளிகண்ணன் said...

\\ஏற்கெனவே மாதாமாதம் பெஸ்டிவல் அட்வான்ஸ் (சிவராத்திரிக்கெல்லாம் பண்டிகை கொண்டாட பத்தாயிரம் வாங்கிய ஆள் நான் மட்டும்தான் இருப்பேன்) வாங்குபவன் என்ற அவப்பெயர்\\

\\தள்ளிக்கொண்டே போன வேலை, கடைசியில் வேலை போகும் நிலையில் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வோமே\\


\\உங்களுக்கு எப்படித் தெரியும் அவங்க வந்து புகழுவாங்கன்னு"

\\


\\அப்புறம், எனக்குக் கிடைத்த பரிசு ஒரு தோசைக்கல் அளவில் வெய்யில் கண்ணாடி. ஆம், பிங்க் கலரில்\\

ரசித்து, சிரித்துக் கொண்டே இருக்கிறேன்

Thamira said...

உங்கள் குழந்தைகள் கல்லூரிக்குப்போவதாக கேள்விப்பட்டேன்.. இந்த வயதிலும் இவ்வளவு அட்டகாசமாக காதலர் தினத்தை ரொமாண்டிக்காக கொண்டாடிக்கொண்டிருக்கிறீர்களே.. ரசித்துச்சிரித்தேன்.. வாழ்த்துகளும்.!

narsim said...

//சரியான கிழமையில் தான் இந்த முறை வருகிறது.//

hahahahahahaaaa.. good one..

kallakkal thala.. Happy V Day.. to "YOU"..

ellaame nalla varihal.. monday detail comment poduren.. enzoy this day..

மணிகண்டன் said...

பரிதாபபடாமையே சொல்றோம் - பிரமாதம்

அப்புறம் விடிய விடிய தண்ணி அடிக்கறதுக்கு பத்தாயிரத்த வாங்கிட்டு, சிவராத்திரி மேல பழி போடறது ரொம்பவே தப்பு.. சிவா தோஷம் வந்துடும் !

வெண்பூ said...

அனுஜன்யா.. வழக்கமான காமெடி போல் ஆரம்பித்தாலும் முடிவு அழகு.. காதலுக்கு கவிதையை முக்கியமல்ல என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்..

Anonymous said...

பதிவர்களிலேயே உங்களைப் பார்த்தவர்கள் நானும், சுந்தர் இருவரும்தான். அந்த தைரியத்தில் யூத்து யூத்துன்னு நீங்க அடிக்கிற கொட்டம் தாங்க முடியல சாமி.

மத்த நாள்தான் அனுவ ஏமாத்திறீங்க. அட்லீஸ்ட் காதலர் தினத்துக்காவது உருப்படியா ஏதாவது வாங்கிக் கொடுங்க. சும்மா பீலிங்க்ஸ் காட்டி ஏமாத்தாதீங்க.

அப்புறம் நீங்க எழுதுன கவிதையை விசு சார் ஏற்கனவே சம்சாரம் அது மின்சாரம் படத்துல எழுதீட்டாரே.

இவன்தான் என் மகன்.
10ஆவது எழுதுனான்.
எழுதிகிட்டு இருக்கான்.
இன்னும் எழுதுவான்.


//"நல்லா இருக்குல்ல.. எம்.ஜி.ஆர். போடுவார்.. அதே மாதிரி"

"எம்.ஜி.ஆரா? - எந்தப் படத்துல? "

"இதயக்கனி"//

ஆஹா உங்கள அந்தக் கண்ணாடியில கற்பனை பண்ணிச் சிரிச்சுகிட்டேஏஏஏ இருக்கேன்.

அப்பா சாமி. நிறுத்த முடியல. (கவுண்டர் ஸ்டைலில் படிக்கவும்)

அனுஜன்யா , Jokes apart, பத்தி எழுதுவதற்கான நல்ல எழுத்து நடை உங்களுக்குக் இயல்பாகவே கை கூடி இருக்கிறது. சுந்தர் சொன்னதுபோல பத்தி எழுதுவதில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்க்கிறேன்.

காதலர் தின வாழ்த்துக்கள். உங்கள் இருவருக்கும்.
வடகரை வேலன்.

TKB காந்தி said...

வார்த்தைகளின் தோரணமா இல்லாம உணர்ச்சிகரமா நல்லா இருந்தது.

//சில பேராவது, பரிதாபப் பட்டு இது ரொம்ப நல்லாயிருக்குன்னு புகழுவாங்க//

இப்போ என்னையும் இந்த லிஸ்ட்ல சேத்துடீங்களா?

ராமலக்ஷ்மி said...

//"நல்லா இருக்குல்ல.. எம்.ஜி.ஆர். போடுவார்.. அதே மாதிரி"//

கற்பனை செஞ்சதில் நல்லாத்தான் இருக்கும் போல:))! போட்டுக்கங்க:))!

தொடரலாம் இது போன்ற பதிவுகள். வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

:))))))

Super.

அன்புடன் அருணா said...

ரொம்ப ரசிக்கும் படியாக இருந்தது பதிவு...
அன்புடன் அருணா

அபி அப்பா said...

அங்கிள்! காதலர் தின பதிவு அருமையோ அருமை:-))

கார்க்கிபவா said...

அடிச்சு தூள் கிளப்பிட்டிங்க தல.. மத்தவங்கள பத்தி தெரியல. எனக்கு பலவித உணர்ச்சிகளை கொடுத்தது இந்தப் பதிவு. வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல் இன்னும் நிறைய இருக்கு. சாரி தல, கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு.. :((

ச.முத்துவேல் said...

/அவள் இப்படிச் சிலாகித்துச் சொன்னால் பெரும்பாலும் கிலுகிலுப்பை அல்லது கை தட்டிக்கொண்டே தலையாட்டும்/

குபுக்கென்று சிரித்துவிட்டேன். (குபுக்..குபுக்..)

/என்று அஞ்சியபடி திரும்பினால், கண்களில் நீர்த்திரை/

எனக்கும் ஃபீலிங்ஸ் ஆயிடுச்சி.

/"இது கவிதை இல்ல தான். ஆனா, உண்மை இருக்கு. அழகு ஆடைகள் போர்த்தாமல், நிர்வாணமா இருந்தாலும், இது தான் நிதர்சனம். இதுதான் உண்மையான காதல்'/

கவித… கவித…

/உங்கள் குழந்தைகள் கல்லூரிக்குப்போவதாக கேள்விப்பட்டேன்../

!!!!...????

/அனுஜன்யா , Jokes apart, பத்தி எழுதுவதற்கான நல்ல எழுத்து நடை உங்களுக்குக் இயல்பாகவே கை கூடி இருக்கிறது. சுந்தர் சொன்னதுபோல பத்தி எழுதுவதில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்க்கிறேன்./

நானும் அண்ணாச்சி கட்சிதான்.



/பிங்க் இடுப்புக் கச்சை (அதாங்க பெல்ட்)/
கச்சைன்னா துணி ( நினைக்கிறேன்). இடுப்புப் பட்டைதான் சரி.

Interesting& emotional. Super.

மாசற்ற கொடி said...

"LOVELY POST " ரொம்ப கிண்டல் பண்றாங்களே ! நீங்க நெஜமாவே யூத் இல்லையா ? இருவருக்கும் வாழ்த்துக்கள். Blog உலகம் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன் - அண்ணியோடு என்னை போன்றவர்களுக்கும் useful ஆக இருக்கும்.

அன்புடன்
மாசற்ற கொடி

மேவி... said...

முதலில் ....
காதலை காதலித்து கொண்டு இருப்பவர் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் .......

மேவி... said...

வழக்கமா ஒரு கவிதை போட்டு இருப்பிங்கன்னு ....
ஒரு முனு வாடி படிச்சுட்டு பின்னோட்டம் போடுலம்ன்னு நினைச்சு வந்தேன்....
ஆனால் long பதிவு ....
வழக்கம் போல் கலக்கி இருக்கீங்க .......
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறிர்கள் என்று நினைக்கிறேன்

ரௌத்ரன் said...

அழகான பதிவு...காதல்,காதலர் தினத்துக்கெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே பை பை சொல்லிட்டதால இந்த ஜமாவுல கலந்துக்க முடியல அனுஜன்யா...இனிமே பார்த்து பரிதாபப்பட்டு யாராவது காதலிச்சா அடுத்த காதலர் தினத்துக்கு நானும் பதிவு போடுறேன்...

//நீங்கள் மணமானவரா? வருத்தங்கள். காதல் திருமணமில்லையே? தப்பித்தீர்கள்.//

வீட்ல வேற படிக்க சொல்லியிருக்கீங்க,மண்டையில் மாவு கட்டு எதுவும் இல்லாமல் தப்பியமைக்கு வாழ்த்துக்கள்.
:)

ரௌத்ரன் said...

இப்போதாங்க கவனிக்கிறேன்..என்னங்க இது? blog title லேர்ந்து எல்லாமே அநியாயத்துக்கு பிங்க் நிறத்தில இருக்கு..நீங்க இப்பவே இப்டினா,என் வயசுல என்னென்ன சேட்டை பண்ணியிருப்பீங்க...?

:))

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அண்ணன்...:)

எம்.எம்.அப்துல்லா said...

//

இந்த யூத்தா இருப்பதின் சோகங்கள்தான் எத்தனை!

//

ஆமா அங்கிள்.

எம்.எம்.அப்துல்லா said...

//பரஸ்பர புகழ் //

ரொம்ப நல்லாயிருக்கு இந்தப் பதிவு

:))))

எம்.எம்.அப்துல்லா said...

\அப்புறம், எனக்குக் கிடைத்த பரிசு ஒரு தோசைக்கல் அளவில் வெய்யில் கண்ணாடி. ஆம், பிங்க் கலரில்\\

ஹா...ஹா..ஹா...

மேவி... said...

"தாமிரா said...
உங்கள் குழந்தைகள் கல்லூரிக்குப்போவதாக கேள்விப்பட்டேன்.. இந்த வயதிலும் இவ்வளவு அட்டகாசமாக காதலர் தினத்தை ரொமாண்டிக்காக கொண்டாடிக்கொண்டிருக்கிறீர்களே.. ரசித்துச்சிரித்தேன்.. வாழ்த்துகளும்.!"
தாமிரா, அனுஜன்யா யூத் அக இருந்தால் என்ன , இல்லாட்டி என்ன ....
காதல் என்ற உணர்வு எல்லா வயதினருக்கும் பொதுவானது தானே ......
என்னக்கு முதல் attraction வந்த போது என்னக்கு 7 வயது

புதியவன் said...

//"அசடு, இந்தப் பதிவை உலகத்தில இருக்குற நிறைய தமிழர்கள் படிக்கிறாங்க. சில பேராவது, பரிதாபப் பட்டு இது ரொம்ப நல்லாயிருக்குன்னு புகழுவாங்க"
//

பரிதாபப் பட்டு இல்லா...உண்மையிலேயே பதிவு சுவாரசியமா ரொம்ப நல்லா இருக்கு...

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு அண்ணா போஸ்ட் :))

Unknown said...

/நமக்கு மஞ்சள் டிரௌசருக்கு ஆரஞ்சு கலர் சட்டை. பச்சை வண்ணத்தில் பூட்ஸ், சிகப்பு நிறத்தில் தொப்பி என்று மாடர்ன் ஆர்ட் போடமுடியாத குறையினை நம் மூலம் தீர்த்துக்கொள்ளும் பெற்றோர்./

ஹா ஹா ஹா அப்படியே உங்கள இந்த காம்பினேஷன்ல நினைச்சு பார்த்தேன்... ;))))))))))

Unknown said...

//காதலர் தினம் பிங்க் வண்ணத்தில் நிரம்பித் தளும்புவதின் நுண்ணரசியல் இப்போது புரிகிறதா? //

ம்ம்ம் இப்ப தான் புரிஞ்சது... பட் எனக்கு பிங்க் பிடிக்காதே... வாட் டு டூ?? :))

Unknown said...

//அதாகப் பட்டது இன்று பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி. காதலர் தினம். //

ஏதோ கல்யாண பத்திரிக்கைய வாசிச்ச மாதிரி இருந்தது... :P

Unknown said...

//எப்போதுமே தோற்கும் ஆண்வர்க்கம், உச்சக்கட்டமாகக் காலில் சாஷ்டாங்கமாக விழும் நாளுக்கு 'காதலர் தினம்' என்று இப்போது பெயர் சூடப்பட்டிருக்கிறது.//

Boys Vs Girls-ல பாய்ஸ் தான் லீடிங்ல இருக்காங்க.. ;)))))

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//டேய், எப்பவுமே சனிக்கிழமை ஏதாவது ஒரு பாடாவதி காதல் படம் போடுவது வழக்கம்தானே. அது என்ன 'காதலர் தினத்தை முன்னிட்டு' என்று ஒரே ரோஜா நிற இதயங்கள் பின்னணியில் ஒரு அட்டகாச அறிவிப்பு! //

பொறாம?? ;))

Unknown said...

//நான் கேட்கும் முன்னரே, "இந்த ரோஜாப்பு கொடுக்கும் காதலர்கள்/கணவர்கள் எல்லாம் ஏன் இவ்வளவு பிற்போக்கா இருக்காங்க" என்றாள்.//

என்னது ரோஜா கொடுக்கறது பிற்போக்கா?? :))

Unknown said...

//பிளாடினம் வாங்கலாம்//

இது ரொம்ப சரி :)) நானும் இப்படி தான் பீல் பண்ணேன்... வந்ததும் கேட்டு வாங்கணும்.. ;)))))))

Unknown said...

//"அப்ப ப்ளுடோனியமா"//

:)))))))))))))

Unknown said...

//"உன்னை எப்படிக் காதலித்தேனோ,
அப்படியே இன்னும் காதலிக்கறேன்
காதலித்துக்கொண்டு இருக்கிறேன்
இன்னும் பன்மடங்கு அதிகமாவும்
வரும் தினங்களில் காதலிப்பேன்"//

வெகு அழகு :)))))))

Unknown said...

//"ஏய் கிறுக்கு, இது கவிதை கூட இல்லை. சராசரிக்கும் கீழான உரைநடை; இதுக்கு போயி இவ்வளோவ் பீலிங்க்ஸா"//

என்னுடையது தானே??

Unknown said...

//சில பேராவது, பரிதாபப் பட்டு இது ரொம்ப நல்லாயிருக்குன்னு புகழுவாங்க"//


பரிதாபப்பட்டெல்லாம் சொல்ல முடியாது...












நிஜமாவே நல்லாருக்கு அண்ணா :))

Unknown said...

//இப்படி ஆரம்பித்தது அவளுக்கு பதிவுலகம், பின்னூட்டம், பரஸ்பர புகழ், கும்மி போன்றவற்றின் பால பாடம். பதிவுலக அரசியல்... நமக்கே இன்னும் புரியல; ஆள வுடுங்க பாஸ்.//

இது எதுக்கு நடுவுல??

Unknown said...

//அப்புறம், எனக்குக் கிடைத்த பரிசு ஒரு தோசைக்கல் அளவில் வெய்யில் கண்ணாடி.//

FYI.. உங்க வயசுக்கு எத்த மாதிரி தான் வாங்கித்தர முடியும்.. உங்கள யார் பொம்மை எல்லாம் எதிர்பார்க்க சொன்னா??

Unknown said...

//"இலவசமாக விளம்பரம் கொடுத்தால் தவறா?" //

சாரி டு செ திஸ்... விளம்பர யுக்தி சரி இல்ல.. இன்னும் கொஞ்சம் பெட்டரா ட்ரை பண்ணுங்க.. ;))))))))

ஜியா said...

//ஒரு பயப்பந்து வயிற்றில் மையம் கொண்டு,//

இதத்தான் உன்னி கிருஷ்னன் அன்னைக்கே, வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத ஒரு உருண்டையும் உருளுதுன்னு சொன்னாரோ??

அருமையான பதிவு அனு.... வாய்ப்பே இல்ல... கவிதையல்லாத ஒரு பதிவான்னு பாத்தேன்... கலக்கிருக்கீங்க... உங்களுக்கும் அண்ணிக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் :))

Anonymous said...

// நாம்ப காதலிச்சது (காண்க: இறந்த காலம்) எல்லாருக்கும் தெரியும் //

ம்.... அந்த நாள் ஞாபகம்.....

கிருத்திகா ஸ்ரீதர் said...

"அசடு, இந்தப் பதிவை உலகத்தில இருக்குற நிறைய தமிழர்கள் படிக்கிறாங்க. சில பேராவது, பரிதாபப் பட்டு இது ரொம்ப நல்லாயிருக்குன்னு புகழுவாங்க""

புகழ்ந்துட்டோம்......

anujanya said...

@ மாதவராஜ்

நன்றி. சென்னை வருகையில் அந்த பிங்க் கண்ணாடியுடன் வருகிறேன் :). எழுத்துப் பிழைகளை ஓரளவு சரி செய்துவிட்டேன். இனி வராமல் இருக்க முயல்கிறேன்.

@ முரளிகண்ணன்

நன்றி முரளி.

@ தாமிரா

உன்னைய தனியா கவனிச்சுக்குறேன். நன்றி தாமிரா.

@ நர்சிம்

நன்றி நர்சிம்.

@ மணிகண்டன்

நர்சிம்/சுந்தர் ஏதாவது போட்டுக் கொடுத்து விட்டார்களா? நன்றி.

@ வெண்பூ

நன்றி. நீ சொல்வதும் உண்மைதான்.

@ வேலன்

நீங்க நேர்லயே பார்த்த பின்னும் நம்பாட்டா எப்படி அண்ணாச்சி? அன்னிக்கு அலுவலக அயர்ச்சியில் கொஞ்சம் களைப்பாக இருந்ததைப் பார்த்து வயதைக் கணக்கு போடாதீங்க :)

உங்க பின்னூட்டத்திற்கு ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டிருந்தோம்.

@ காந்தி

நன்றி காந்தி. நீ என்னுடைய எல்லா லிஸ்டிலும் உண்டு :))

@ ராமலக்ஷ்மி

அத்வானி ரத யாத்திரை மாதிரி, பிங்க் கண்ணாடியில் பாரத தர்ஷன் செய்யலாம் போல இருக்கு. எல்லாருக்கும் என்ன அந்தக் கண்ணாடியில் பார்க்க அவ்வளவு ஆசை :)) நன்றி ராமலக்ஷ்மி.

@ சென்ஷீ

நன்றி தல.

@ அருணா

நன்றி அருணா.

@ அபி அப்பா

மூத்த பதிவரின் முதல் வருகையே குசும்புடன். பரவாயில்ல, குத்துங்க எசமான் குத்துங்க. நன்றி அபி அப்பா.

@ கார்க்கி

//சாரி தல, கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு.. :(( //
அட நீயும் யூத்தான் சகா. மத்தவங்களுக்கு இல்ல பொறாமையா இருக்கணும்.
நன்றி கார்க்கி.

@ முத்துவேல்

//இடுப்புப் பட்டைதான் சரி.//
கவிஞர் சொன்னா சரியாத்தான் இருக்கும். சிறுவயதில் கச்சு என்றால் பெல்ட் என்று படித்த ஞாபகத்தில் எழுதிவிட்டேன். இனிமேல் சரிசெய்து கொள்கிறேன். உங்கள் பாராட்டுக்கு நன்றி முத்துவேல்.

@ மாசற்ற கொடி

நன்றி. சிஸ்டர், இந்த தாமிரா, வேலன் பேச்சுகளை சீரியசா எடுத்துக்காதீங்க.
blog உலகமா? இந்த அளவு எழுதி உதை வாங்காமல் இருப்பதே பெரிய விஷயம்.

@ MayVee

நன்றி பிரதர். நீங்க தான் நம்மள ஒழுங்கா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க!

@ ரௌத்ரன்

நன்றி. //மண்டையில் மாவுக் கட்டு// ஹா ஹா.

//நீங்க இப்பவே இப்டினா,என் வயசுல என்னென்ன சேட்டை பண்ணியிருப்பீங்க...?//
ஒரு மூணு/நாலு வருசத்தில அவ்வளவு வித்தியாசம் தோன்றாது :))

@ தமிழன்

நன்றி தம்பி.

@ அப்துல்லா

இந்தத் தாமிரா சொல்றத கேட்டு கெட்டுப்போகாத. அண்ணனுக்கு ஆங்கிலத்தில் Elder brother. Ungle இல்ல. கிர்ர்ர்ர்ர்ர்ர்.

நன்றி அப்துல்.

@ புதியவன்

நன்றி புதியவன்.

@ ஸ்ரீ

வாங்க தங்கச்சி! ஒரு வேளை கோவமோன்னு நினெச்சேன். ஒரே பின்னூட்ட மழை வேற. நீங்க எல்லாமே சிங்கம். அதான் சிங்கிளா வரீங்க :))
அடுத்த வருடம் பச்சை நிறமே பச்சை நிறமே பாடக் கடவது :))))
பதினாறு பின்னூட்டமெல்லாம் போட முடியாது; பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்த முடியும்; வாழ்த்தறேன் :))

நன்றி ஸ்ரீ.

@ ஜி

நன்றி ஜி. உன்னுடைய பதிவு இன்னும் பிரமாதம்.

@ வெயிலான்

யாருமே கவனிக்கலியோன்னு பார்த்தேன். நுட்பம் - அதன் மறுபெயர் ரமேஷ் :)
நன்றி.

அனுஜன்யா

anujanya said...

@ கிருத்திகா

வாங்க! இப்பத்தான் 'நன்றி நவிலல்' முடிச்சேன். லேட்டா வந்தாலும்... லேட்டஸ்ட்.

நன்றி கிருத்திகா. (யூத்புல் விகடன் பாத்தீங்களா?)

அனுஜன்யா

கார்க்கிபவா said...

/
யாருமே கவனிக்கலியோன்னு பார்த்தேன். நுட்பம் - அதன் மறுபெயர் ரமேஷ் //

இதெல்லாம் ஓவர் தல. அந்த பிராக்கெடூல நீங்க போடாமா அவரு சொன்னா நுட்பம்.. பளிச்சுனு பிராக்கெட்டுல போட்டுட்டு அதையும் கவினிக்காம இருப்போமா? இதுல அவருக்கு விருது வேற? :))))))

anujanya said...

கோவிச்சுக்காத சகா. ரமேஷோட என்ன தகராறு? :))

//அந்த பிராக்கெடூல நீங்க போடாமா அவரு சொன்னா நுட்பம்.. பளிச்சுனு பிராக்கெட்டுல போட்டுட்டு அதையும் கவினிக்காம இருப்போமா? // ஆனாலும் உன் கமெண்டும் சரிதான். பின்னூட்டத்தை எல்லாம் கண்ணுல விளக்கெண்ணை விட்டுப் படிக்கும் உன் பார்வையும் 'நுட்பம்' - போதுமா! :)))))))

அனுஜன்யா

வால்பையன் said...

இந்த யூத்தா இருப்பதின் சோகங்கள்தான் எத்தனை!//

இப்படியெல்லாம் சொல்லி நான் யூத்தாகுறதுக்கு முன்னாடியே பயமுறுத்துறிங்களே!

மண்குதிரை said...

அனுஜன்யா

நல்ல காமடி போங்க!

மேவி... said...

anujanya....
i hAv written a poem in my blog.
pls post ur comments after reading it

MSK / Saravana said...

உங்களுக்கும் அண்ணிக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.. :)

ஆனா இது உண்மையா..??
//தாமிரா said...
உங்கள் குழந்தைகள் கல்லூரிக்குப்போவதாக கேள்விப்பட்டேன்.. இந்த வயதிலும் இவ்வளவு அட்டகாசமாக காதலர் தினத்தை ரொமாண்டிக்காக கொண்டாடிக்கொண்டிருக்கிறீர்களே..//

Deepa said...

:-)))))))
மிக‌வும் ரசித்தேன்!

மணிகண்டன் said...

யூத்ன்னா அடிக்கடி பதிவு போடணும்.

anujanya said...

@ வால்பையன்
வாங்க குரு. வால் இருக்கும்வரை ஒரு கவலையும் வராது.

@ மண்குதிரை

நன்றி. உங்கள் முதல் வருகை - கரெக்ட்?

@ MayVee

பார்த்தேன். படித்தேன். பின்னூட்டம் இட்டேன்.

@ சரவணன்

நன்றி சரா. தாமிராவைப் பற்றி உனக்குத் தெரியும். தெரிஞ்சும் கேக்குறியே!

@ தீபா

வாங்க தீபா. உங்களுக்கும் இதுதான் முதல் வருகை என்று நினைக்கிறேன். நன்றி.

@ மணிகண்டன்

போட்டா 'மொக்கை பதிவர்'னு முத்திரை குத்துவீங்க. போடாட்டா 'யூத்' இல்ல. ஏதாவது ஒரு நிலை எடுங்கப்பா.

@ HS

சரி.

அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரசிக்கும்படி சொல்லிய விதம் அருமை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

\\உங்களுக்கு எப்படித் தெரியும் அவங்க வந்து புகழுவாங்கன்னு"

ஹைலைட்

Anonymous said...

:)))

anujanya said...

@ அமித்.அம்மா

தாமதமான நன்றிகள்.

@ கடையம் ஆனந்த்

தாமதமான நன்றிகள். ஆனா, உங்க பிறந்த நாளுக்கு வாழ்த்தி விட்டேன் :)

அனுஜன்யா

ரெஜோ said...

சார் நான் ஏன் காதலிக்கணும் ன்னு ஆசைப்படக் கூடாது ??? ;-)

அருமையான பதிவு . இது போன்ற பதிவுகளைப் படிக்கும் ஒவ்வொரு நாளுமே காதலின் தினம் தான் .

anujanya said...

இன்றுதான் பார்த்தேன் ரெஜோ. நன்றி.

அனுஜன்யா

Om Santhosh said...

உங்களது காதல் வரிகள் எனக்கு பிடித்துள்ளது,
மிகவும் ரசிக்கும்படி செய்துள்ளது